தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மோசடி ஆட்களுக்கு பணம் கொடுக்காதீர்கள்: யுஜிசி எச்சரிக்கை

சென்னை: யுஜிசியின் திட்டங்களுக்கு ஒப்புதல் பெற்று தருவதாக பொய்க்கூறி யாரேனும் பணம் கேட்டால் புகார் அளிக்கலாம் என யுஜிசி தெரிவித்துள்ளது. இதுகுறித்து பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) செயலர் மணிஷ் ஆர்.ஜோஷி வெளியிட்ட அறிவிப்பு விவரம்: யுஜிசி பெயரைப் பயன்படுத்தி சிலர் பண மோசடியில் ஈடுபடுவதாக புகார் கிடைக்கப் பெற்றுள்ளது.

Advertisement

அதன்படி சில நேர்மையற்ற நபர்கள், யுஜிசியின் திட்டங்களுக்கு ஒப்புதல் பெற்று தருவதாக பொய்க்கூறி மோசடியாக பணம் கேட்பது கவனத்துக்கு வந்துள்ளது. எந்தவொரு தனிநபரையோ அல்லது நிறுவனத்தையோ எவ்வித பணிகளுக்கும் பணம் கேட்க அல்லது ஒப்புதல் அளிக்க யுஜிசி அங்கீகரிக்கவில்லை.

இதையடுத்து இந்த விவகாரத்தில் பொதுமக்கள், கல்லூரிகள் கூடுதல் விழிப்புடன் இருக்க வேண்டும். இதுபோன்ற மோசடியான சம்பவங்களுக்கு இரையாக வேண்டாம். இதுதொடர்பாக யாரும் உங்களை தொடர்பு கொண்டால் உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்தில் அல்லது யுஜிசியின் 011-23239337, 23604121 என்ற தலைமை விஜிலென்ஸ் அலுவலருக்கு தகவல் தெரிவிக்கலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Related News