தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

செல்போனில் பெண் போல் பேசி வாலிபரிடம் ரூ.17.50 லட்சம் மோசடி: பலே ஆசாமி கைது

அரியலூர்: அரியலூர் மாவட்டம் ஆண்டிமடத்தை சேர்ந்த ஜெய்சங்கர் மகன் பார்த்திபன்(30). இவருக்கு வலைதளம் மூலம் திருமணம் செய்து கொள்வதாக கூறி ஒரு பெண் பழகினார். பின்னர் வர்த்தகம் வாயிலாக அதிக லாபம் சம்பாதிக்கலாம் என்று ஆசைவார்த்தை கூறி ரூ.17.50 லட்சம் முதலீடு செய்யுமாறு பார்த்திபனிடம் அந்த பெண் கூறினார். இதை நம்பிய அவர் பெண்ணின் வங்கி கணக்குக்கு ரூ.17.50 லட்சத்தை அனுப்பினார். அதன்பிறகு அந்த பெண் பார்த்திபனை தொடர்பு கொள்ளவில்லை. பின்னர் தான் பெண் போன்று மர்ம நபர் நடித்து ஏமாற்றி பண மோசடி செய்தது தெரியவந்தது.

Advertisement

இதுகுறித்து அரியலூர் சைபர் கிரைமில் பார்த்திபன் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்தனர். அதில், கன்னியாகுமரி மாவட்டம் காட்டாதுறை கல்குளத்தை சேர்ந்த முகமது அலி மகன் அசார்(36) என்பவர் தான் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அசாரை நேற்று கைது செய்ததுடன் 2 செல்போன், 3 சிம் கார்டு, வங்கி கணக்கு புத்தகம், ஏடிஎம் கார்டு, பென் டிரைவ் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் அரியலூருக்கு அசாரை அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Related News