தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ரூ.5.24 கோடி மோசடி வழக்கில் படத் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகருக்கு மும்பை போலீஸ் சம்மன்..!!

Advertisement

சென்னை: ரூ.5.24 கோடி மோசடி வழக்கில் படத் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகருக்கு மும்பை போலீஸ் சம்மன் அனுப்பி உள்ளனர். மும்பையை சேர்ந்த தொழிலதிபர் அஜய் ஜெகதீஷ் என்பவரிடம் ஸ்டாக் மார்கெட் எக்ஸ்சேஞ்சில் முதலீடு செய்து அதிக லாபம் தருவதாக கூறி கேரளாவை சேர்ந்த ரோகன் மற்றும் பிரபல சினிமா பட தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் ஆகிய இருவரும் ரூ.5.24 கோடி கடந்த ஆண்டு வாங்கி உள்ளனர்.ஆனால் அவர்களை சொன்னபடி நடந்துகொள்ளவில்லை என்பதால் மும்பை குற்றப்பிரிவு போலீசில் அஜய் ஜெகதீஷ் புகார் கொடுத்துள்ளார். அதன் பேரில் பெங்களூருவில் பதுங்கி இருந்த ரோகனை நேற்று மும்பை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் சென்னை கே.கே. நகரில் உள்ள ரவீந்தர் வீட்டுக்கு மும்பை போலீசார்

கைது செய்ய இரவு வந்துள்ளனர்.

தனக்கு கடுமையான உடல் நல பாதிப்பு இருப்பதால் தன்னால் தற்போது வர இயலாது என கூறியுள்ளார். மேலும், மருத்துவரை வரவழைத்து மருத்துவ சான்றிதழ்களை காட்டினார். இதனை அடுத்து அவரை வழக்கு விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என கூறி, சம்மன் வழங்கிவிட்டு அவருடைய கூட்டாளிகள் இருவரை கைது செய்தனர். கிண்டியை சேர்ந்த மணிகண்டன் மற்றும் கொளத்தூரை சேர்ந்த பாண்டி ஆகிய இருவரை மும்பை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சென்னையில் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை போலீசார் உதவியுடன் அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இதன் பிறகு ட்ரான்சிட் வாரண்ட் வாங்கி மணிகண்டன் மற்றும் பாண்டி ஆகிய இருவரை மும்பை அழைத்து செல்வதற்கான ஏற்பாடுகளை மும்பை குற்றப்பிரிவு போலீசார் செய்து வருகின்றனர்.

 

Advertisement