தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பிரான்ஸ் தேர்தல் முடிவு அறிவிப்பு; இடதுசாரிகள் தலைமையில் கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பு; எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லை

பாரிஸ்: பிரான்ஸ் நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் நேற்று வெளியான நிலையில், எந்த கட்சிக்கும் ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மை பலம் கிடைக்கவில்லை. பிரான்ஸ் நாடாளுமன்றத்திற்கு கடந்த மாதம் 30ம் தேதியும், நேற்று முன்தினமும் 2 கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டது. 2ம் கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்ததைத் தொடர்ந்து உடனடியாக வாக்குகள் எண்ணப்பட்டன. இதன் முடிவுகள் நேற்று அதிகாலை வெளியிடப்பட்டது. இதில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை பலம் கிடைக்கவில்லை. இடதுசாரி கூட்டணியான நியூ பாப்புலர் முன்னணி 182 இடங்களுடன் அதிக தொகுதிகளை வென்ற கட்சியாக உள்ளது. அதிபர் இம்மானுவேல் மேக்ரானின் நடுநிலைவாத கூட்டணியான 168 இடங்களில் வென்று 2வது இடத்தையும், தீவிர வலதுசாரி கூட்டணியான தேசிய பேரணி கூட்டணி 143 இடங்களிலும் வென்றன.
Advertisement

மொத்தம் 577உறுப்பினர்கள் கொண்ட பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் ஆட்சி அமைக்க 289 இடங்களில் வெற்றி பெற வேண்டும். ஆனால், எந்த கட்சிக்கும் ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மை பலம் கிடைக்கவில்லை. முதல்கட்ட தேர்தலில் முதல் இடம் பிடித்த தீவிர வலதுசாரிகள் இம்முறை 3ம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால் தொங்கு நாடாளுமன்றம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே, இடதுசாரிகளுடன் அதிபர் மேக்ரான் கட்சி கூட்டணி ஆட்சி அமைக்க வாய்ப்புகள் இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது. பெரும்பான்மை பெறத் தவறியதைத் தொடர்ந்து பிரதமர் கேப்ரியல் அட்டல் தனது பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாக முதலில் தகவல்கள் வந்த நிலையில், அதிபர் மேக்ரான் அதனை மறுத்துள்ளார். அரசியல் குழப்பங்களுக்கு தீர்வு காணும் வரை பிரதமராக பொறுப்பு வகிக்க கேட்டுக் கொண்டுள்ளதாக அதிபர் மேக்ரான் கூறி உள்ளார். இடது சாரிகள் வெற்றி பெற்றதை ஏற்றுக் கொள்ள முடியாத வலது சாரி கட்சியின் ஆதரவாளர்கள் பாரீசில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை கண்ணீர் புகை குண்டுகளை வீசி போலீசார் கலைத்தனர். இன்னும் 3 வாரத்தில் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் நடக்க உள்ள நிலையில் பிரான்சில் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

Advertisement

Related News