கோட்டை மைதானத்தில் நிகழ்ச்சி நடத்த அனுமதி தேவை: திமுக.எம்.பி. கதிர் ஆனந்த் வலியுறுத்தல்
12:47 PM Jul 22, 2024 IST
Share
வேலூர்: வேலூர் கோட்டை மைதானத்தில் மீண்டும் பொது நிகழ்ச்சிகள் நடத்த அனுமதிக்க திமுக. எம்.பி. கதிர் ஆனந்த் வலியுறுத்தியுள்ளார். மைதானத்தை அகழாய்வுத்துறை தன் கட்டுப்பாட்டில் கொண்டுவந்து பொது நிகழ்ச்சிக்கு தடை விதித்துள்ளதாக கதிர் ஆனந்த் புகார் அளித்தார். வேலூர் கோட்டை மைதானத்தில் பொது மேடை ஒன்றை அமைக்க வேண்டும் என மக்களவையில் பேசிய கதிர் ஆனந்த் கோரிக்கை வைத்தார்.