தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இங்கிலாந்து அரசு அனுமதி அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு ஆலோசகரானார் முன்னாள் பிரதமர் ரிஷி சுனக்

 

Advertisement

லண்டன்: அமெரிக்காவை சேர்ந்த தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு ஊதியம் பெறும் ஆலோசகர் பதவியை ஏற்பதற்கு முன்னாள் பிரதமர் ரிஷி சுனக்கிற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து முன்னாள் பிரதமர் ரிஷி சுனக். 2015ம் ஆண்டு எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டு தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கினார். பின்னர் 2022ம் ஆண்டு அக்டோபரில் இங்கிலாந்தின் பிரதமராக பொறுப்பேற்றார். 2024ம் ஆண்டு நடந்த தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சி தோல்வியடைந்த உடன் பிரதமர் பதவி மற்றும் கட்சி பதவியை ராஜினாமா செய்தார். எம்பியாக மட்டுமே இருந்து வந்தார். இந்நிலையில், அரசின் முன்னாள் அமைச்சர்களுக்கான வணிக நியமன விதிகளின் கீழ் வணிக நியமனங்கள் குறித்த ஆலோசனை குழுவை ரிஷி சுனக் அணுகியிருந்தார்.

இதனை தொடர்ந்து இங்கிலாந்து அரசின் கண்காணிப்பு அமைப்பானது அமெரிக்காவை சேர்ந்த தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாப்ட் மற்றும் ஏஐ நிறுவனமான ஆந்த்ரோபிக் நிறுவனங்களுடன் ஊதியம் பெறும் ஆலோசகர் பதவியை ஏற்பதற்கு அனுமதி வழங்கியுள்ளது. மேலும் சுனக் பதவியில் இருந்த காலத்தில் தனக்கு கிடைத்த எந்த சலுகை பெற்ற தகவலையும் பயன்படுத்தக்கூடாது என்றும் அறிவுறுத்தி உள்ளது. ஆலோசகர் பதவியின் மூலமாக கிடைக்கும் வருமானம் தனது மனைவி அஷதா மூர்த்தி தொடங்கியுள்ள கல்வி தொண்டு நிறுவனமான தி ரிச்மண்ட் திட்டத்திற்கு நன்கொடையாக வழங்கப்படும் என்று ரிஷி சுனக் தெரிவித்துள்ளார்.

 

Advertisement