தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பாமக இளைஞரணி தலைவராக முன்னாள் எம்எல்ஏ கணேஷ்குமார் நியமனம்: அன்புமணி அறிவிப்பு

 

Advertisement

சென்னை: விழுப்புரம் மாவட்டம் பட்டானூரில் கடந்த டிசம்பர் மாதம் 28ம் தேதி அன்று நடந்த பாமக சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் பாமக இளைஞர் சங்க தலைவராக தனது பேரனான முகுந்தனை (ராமதாசின் மூத்த மகள் காந்திமதியின் மகன்) நியமிப்பதாக ராமதாஸ் அறிவித்தார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த அன்புமணி, மைக்கை மேஜையில் வீசிவிட்டு வெளியேறினார். அதன்பிறகு தான் தந்தை, மகனான ராமதாசுக்கும், அன்புமணிக்கும் இடையே விரிசல் ஏற்பட்டது. மூத்த நிர்வாகிகள், குடும்பத்தினர் சமரசம் பேசியும் இன்னும் இந்த பிரச்னை முடிவுக்கு வரவில்லை. இருவருக்கும் இடையே உச்சக்கட்ட மோதல் உருவானதால் கடந்த மே மாதத்தில் முகுந்தன் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து பாமக இரண்டானது.

மகன் ஒரு குழுவாகவும், தந்தை ஒரு குழுவாகவும் செயல்பட்டு விமர்சித்து வருகின்றனர். இருவரும் மாற்றி மாற்றி நிர்வாகிகளை நியமித்து வருகின்றனர். இந்நிலையில் பாமக இளைஞர் அணி தலைவராக தமிழ்குமரனை (கவுரவ தலைவர் ஜி.கே.மணியின் மகன்) ராமதாஸ் கடந்த வாரம் நியமனம் செய்தார். இதற்கான ஆணையை தைலாபுரம் தோட்டத்தில் ராமதாஸ், நிர்வாகக்குழு உறுப்பினர் காந்திமதி ஆகியோர் தமிழ்குமரனிடம் வழங்கினர். தற்போது இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், நேற்று பாமக நிர்வாகிகள் கூட்டத்தில் இளைஞரணி தலைவராக முன்னாள் செஞ்சி எம்எல்ஏ கணேஷ்குமார் நியமிக்கப்பட்டார்.

 

Advertisement