தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மாஜி அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேச்சு வைரல் அதிமுகவை அழிக்க நினைத்தார் எம்ஜிஆர் எடப்பாடியை ஆதரிக்க நாங்க லூசுகளா? மைண்ட் வாய்சுன்னு நினைச்சு பேசிட்டாரோ...

திண்டுக்கல்: அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், சர்ச்சை பேச்சுக்கும், உளறல் பேச்சுக்கும் பெயர் போனவர். இந்நிலையில், திண்டுக்கல்லில் அதிமுக சார்பில் நேற்று முன்தினம் இரவு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திண்டுக்கல் சீனிவாசன் பேசியதாவது: அதிமுகவை அழித்து விடலாம்; என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என எம்ஜிஆர் நினைத்ததை போல, இந்த கட்சியை அசைத்து விடலாம் என நினைத்து கொண்டிருக்கின்றனர். கூட்டம் கூடுவதால் எல்லோரும் எம்ஜிஆர் போல ஆகிவிட முடியாது. நடிகர் விஜய்க்கு கூட்டம் கூடுகிறது. ஆனால், அவருக்கு வாக்களிக்க மாட்டார்கள்.

Advertisement

மேடையில் இருக்கிற நாங்கள் எல்லாம் கிறுக்கன்களா? லூசுகளா எடப்பாடியை ஆதரிப்பதற்கு? (திடீரென சுதாரித்தவர்) பக்கத்து மாவட்டத்தில் உள்ள அவரை (ஓபிஎஸ்) ஏன் ஆதரிக்கவில்லை என்றால், அவரிடம் நேர்மை இல்லை; அவரிடம் பொறுப்புகளை கொடுத்து பார்த்தோம். சர்வாதிகாரத்தின் மொத்த உருவமாக அவர் இருந்த காரணத்தினாலே ஜனநாயகத்தின் பாதுகாவலராக இருக்கின்ற எடப்பாடியை நாங்கள் ஆதரிக்கிறோம். மனக்கசப்பில் அதிமுகவை விட்டு போனவர்கள் மீண்டும் வாருங்கள். இவ்வாறு பேசினார். இந்த பேச்சால் கூட்டத்தில் கலந்து கொண்ட அதிமுக தொண்டர்களிடையே சலசலப்பு ஏற்பட்டது. பின்னர் அவர்கள் சிறிதுநேரத்தில், ‘இதெல்லாம் அண்ணே வழக்கமாக பேசுறதுதானப்பா... இப்போ கூட மைண்ட் வாய்சுன்னு நினைச்சு பேசிட்டாரோ...’ என அலுத்து கொண்டு சென்றனர்.

Advertisement