தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இலைக்கட்சி மாஜி அமைச்சர் அதிரடிக்கு தயாராகி வருவது பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

Advertisement

‘‘மலராத கட்சியை பகைக்க முடியாமலும், இலைக் கட்சியை விமர்சிக்க முடியாமலும் தடுமாறி வருவது யாராம்..’’ என்றபடி வந்தார் பீட்டர் மாமா. ‘மலராத கட்சி கூட்டணியில் ஒட்டியும், ஒட்டாத மனநிலையிலும் குக்கர்காரர் இருந்து வர்றார்.. அவரது கட்சிக்காரர்களில் பலருக்கு இந்த கூட்டணியில் தொடர்வதில் விருப்பமில்லையாம். ஆனால், அவரோ விமர்சித்து பேசக்கூடாது. அனுசரித்து போங்க என கூறி வருகிறாராம்.. மறுபக்கம் மலராத கட்சியையே கிடைக்கும் கேப்பில் எல்லாம் சைலண்டாக சேலத்துக்காரர் விமர்சித்து வருகிறார்.. சமீபத்திய தென்மாவட்ட பிரசார சுற்றுப்பயணத்திலும் இதையே வலியுறுத்தியுள்ளாராம்.. மேலும், கூட்டணி கட்சிகளின் பெயர்களை குறிப்பிட்ட அவர், குக்கர்காரரின் கட்சிப்பெயரை மட்டும் உச்சரிக்காதது பெரும் புகைச்சலை ஏற்படுத்தி இருக்காம்.. எப்படியாவது இந்த கூட்டணியில் ஒரு சில சீட்களை வாங்கி சமஉ ஆகலாம் என குக்கர்காரர் திட்டமிட்டிருந்தாராம்.. வடமாநில நதி தொகுதி, ஹனீபீ மாவட்டத்தில் பட்டி, இரண்டெழுத்து தொகுதியை குறி வைத்திருந்தாராம்.. ஆனால், இதற்கான வாய்ப்பு கொஞ்சம் கூட இல்லையாம்.. மலராத கட்சியை பகைக்க முடியாமலும், இலைக்கட்சியை விமர்சிக்க முடியாமலும் குக்கர்காரர் தடுமாறி வருவது அக்கட்சியினரிடையே வேதனையை ஏற்பத்தி இருக்காம்.. தனியா இருந்தாலும் கவுரவமா இருந்தோம்.. தேனிக்காரரும் கூட்டணியில் இருந்து வெளியேறிட்டாரு... நம்ம நிலைமை ரொம்ப கவலைக்கிடமாகுதே என புலம்பி வருகின்றனராம்.. அடுத்ததாக என்ன முடிவு எடுக்கலாம். நண்பனா, எதிரியா என ஆதரவாளர்களிடம் பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளாராம்...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘விரக்தியின் விளிம்புக்கு சென்றுவிட்ட இலை கட்சியின் மாஜி அமைச்சர் அதிரடிக்கு தயாராகி வருகிறாராமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா. ‘‘கடலோர மாவட்டத்தை சேர்ந்த இலை கட்சியின் மாஜி அமைச்சர்களிடையே பனிப்போர் நீடித்த வண்ணம் இருக்காம்.. சமீபத்தில் சேலத்துக்காரர் சுற்றுப்பயணத்தின் போது, மாஜி அமைச்சர்களிடையே மோதல் வெளிச்சத்துக்கு வந்துருக்கு.. இந்த நிலையில், மாஜி அமைச்சர் மணியானவரின் கை ஓங்கியுள்ளதாம்.. இதனால் மற்றொரு மாஜி அமைச்சர் என்ன செய்வதென்று புரியாமல் தவித்து வருகிறாராம்.. அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து தனது ஆதரவாளர்களிடம் பேச அவர் முடிவு செய்துள்ளாராம்.. தொடர்ந்து, புறக்கணிக்கப்படுவது அவருடைய ஆதரவாளர்களிடையே சலசலப்பையும், ஆத்திரத்தையும் ஏற்படுத்தி இருக்குதாம்.. இதனால் வெகுவிரைவில், அதிரடிக்கு மாஜி அமைச்சர் தயாராகி வருகிறாராம்...’’ என்றார் விக்கியானந்தா.‘‘என்னைப்பற்றி யாரிடம் புகார் செஞ்சாலும் மீண்டும் என்னிடம் தான் வர வேண்டும் என மிரட்டுகிறாராமே விஏஓ..’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘மான்செஸ்டர் மாவட்டத்துல இருக்கிற மேட்டுப்பாளையம் ஊராட்சியில், தமிழ் கடவுள் பெயர் கொண்ட விஏஓ அட்ராசிட்டி நாளுக்கு நாள் அதிகமாகிட்ேட இருக்காம்.. இவருக்கு கூடுதல் பொறுப்பும் கொடுத்திருக்கிறதால இரண்டு ஊராட்சிகளிலும் இருந்து பட்டா மாறுதல், சிட்டா மாறுதல் உள்ளிட்ட வருவாய் துறை சம்பந்தமான சான்றிதழ் கேட்க செல்லும் பொதுமக்களிடம் குறைந்தது ரூ.10 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை வெளிப்படையாகவே லஞ்சம் கேட்டு டார்ச்சர் கொடுக்கிறாராம்.. இந்த டார்ச்சரை தாங்க முடியாம பொதுமக்கள் சப்-கலெக்டர் ஆபீசில் புகார் கொடுத்தாங்களாம்.. இதுதொடர்பாக விசாரிச்ச சப்-கலெக்டர் அட்ராசிட்டி விஏஓவை அழைத்து எச்சரிக்கை விடுத்தாராம்.. ஆனாலும், விஏஓ திருந்தியபாடு இல்லையாம்.. என்னைப்பற்றி யாரிடம் புகார் செய்தாலும் மீண்டும் என்னிடம்தான் வர வேண்டும் என பொதுமக்களை மிரட்டி வருகிறாராம்.. இப்போ விஏஓ நடவடிக்கையை விஜிலென்ஸ் தீவிரமா கண்காணிச்சிட்டு இருக்கிறாங்களாம்..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘நட்டாற்றில் விட்டு விட்டு போயிட்டதாக மாவட்ட செயலாளர்கள் எல்லாம் கடும் விரக்தியில இருக்காங்களாமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.

‘‘அதிமுகவை மீட்காமல் தற்போது ஓபிஎஸ் நட்டாற்றில் நிற்பதால் மன்னர் மாவட்டத்தில் ஓபிஎஸ் மாவட்ட செயலாளர்கள் கடும் விரக்தியில் இருக்காங்களாம்.. வடக்கு மாவட்ட செயலாளராக முன்னாள் நகராட்சி தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார்.. இதேபோல் தெற்கு மாவட்டத்தில் டிடிவியின் முன்னாள் ஆதரவாளரான முன்னாள் எம்எல்ஏ நியமனம் செய்யப்பட்டு இருக்காரு.. இவர்களுடன் அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் செல்லவில்லையாம்.. இருந்தாலும் கடந்த சில மாதங்களாக கட்சியை நடத்தி வந்திருக்காங்க.. எப்படியாவது அதிமுகவில் சேர்ந்து கட்சியில் தங்களுக்கு தகுந்த அக்கீகாரத்தை பெற்று தருவார்கள் என்று நினைத்தாங்களாம்.. அதற்கான வேலைகளையும் செய்து இருக்காங்க.. ஆனால் மலராத கட்சியை நம்பி தற்போது நட்டாற்றில் இருக்கிறார். ஓபிஎஸ் ஒன்றும் செய்வதில்லை. அவரை நம்பி வந்ததற்கு நட்டாற்றில் விட்டு விட்டனரே என புலம்பி தவிக்கிறாங்க..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘போஸ்டருக்கு மேல் போஸ்டர் ஒட்டியும் இன்னும் போஸ்டிங் வரலையே என வருத்தத்தில் இருக்கிறாராமே இலைக்கட்சி முன்னாள் மாவட்ட செயலாளர்..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘கடைகோடி மாவட்டத்துல உள்ள இலைக்கட்சியின் முன்னாள் மா.செ. ஒருத்தரு, போஸ்டருக்கு மேல் போஸ்டர் ஒட்டியும் இன்னும் போஸ்டிங் வரலையே என்று வருத்தத்தில் உள்ளாராம்.. இவரு ஏற்கனவே தேனிக்காரர் அணியில் இருந்து பின்னர் சேலத்துக்காரர் அணிக்கு வந்தவரு.. மாதம் ஒருமுறை என கணக்கு வைத்து, போஸ்டர் அச்சடித்து ஒட்டி வருகிறாராம்.. போஸ்டர் தான் பிரமாண்டமாக இருக்குதே தவிர, இன்னும் இவருக்கு கட்சியில் போஸ்டிங் பற்றி எந்த பேச்சும் இல்லையாம்.. போஸ்டிங் வருவதற்கான அறிகுறியே இல்லாததால் அப்செட் மூடில் இருக்கிறாராம்.. கட்சி நிகழ்ச்சிகளுக்கும் முறையான அழைப்புகள் கிடையாதாம்.. முன்னாள் மா.செ. என்ற வகையிலாவது அழைக்கலாம். ஆனால் அதைக் கூட கட்சிக்காரங்க செய்ய மாட்டேங்கிறாங்க என்று தன்னை சந்திப்பவர்களிடம் ஆதங்கமாக பேசி வருகிறாராம்.. கட்சி பணி இல்லாததால் அவ்வப்போது விவசாய பணி, புல்லட் ஓட்டுவது போன்ற போட்டோக்களை சமூக வலை தளங்களில் போட்டு லைக் வாங்குவதில், ஆர்வம் காட்ட தொடங்கி இருக்கிறாராம்..’’ என்று முடித்தார் விக்கியானந்தா.

 

Advertisement

Related News