தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இறுதி சடங்கு செலவுக்கு பணம் வைத்துவிட்டு முன்னாள் அரசு அதிகாரி ரயிலில் பாய்ந்து தற்கொலை: உருக்கமான கடிதம்

 

Advertisement

ஜோலார்பேட்டை: திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி ரயில் நிலையத்திற்கு நேற்று முன்தினம் காலை சுமார் 75 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் வந்தார். பின்னர், அவர் சென்னையில் இருந்து கேரள மாநிலம், திருவனந்தபுரம் செல்லும் சபரி எக்ஸ்பிரஸ் ரயில் முன் திடீரென பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

விசாரணையில், அவர் வாணியம்பாடி அடுத்த செட்டியப்பனூர் தென்னமர சாலை பகுதியில் வசிக்கும் சந்திரசேகரன்(76) என்பதும், திருவண்ணாமலை மாவட்டத்தில் புள்ளியியல் துறையில் ஆய்வாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். திருமணம் ஆகாதவர். உறவினர்கள் யாரும் இல்லாததால் தனியாக வசித்து வந்துள்ளார். சந்திரசேகரன் வீட்டிற்கு சென்று போலீசார் ஆய்வு செய்ததில், வாணியம்பாடி தாலுகா இன்ஸ்பெக்டருக்கு அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தை கைப்பற்றினர்.

அதில் கூறியிருந்ததாவது: திருவண்ணாமலை மாவட்டத்தில் புள்ளியியல் துறையில் ஆய்வாளராக பணியாற்றி ஓய்வு பெற்ற எனக்கு திருமணம் ஆகவில்லை. வயது முதிர்வு காரணமாக சிரமப்பட்டு வருவதால் நான் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளேன்‌. எனது முடிவுக்கு நானே காரணம். வேறு யாரும் காரணம் இல்லை. எனது நண்பர்களுக்கு தொல்லை கொடுக்க விரும்பவில்லை. என்னை பார்க்க உறவினர்கள் யாரும் வர மாட்டார்கள்.

நான் இறந்த பிறகு எனது உடலை பிரேத பரிசோதனை செய்து மருத்துவமனையில் இருந்து இடுகாடு சென்று புதைத்து விடவும். அதற்கான செலவுக்கு ரூ.25 ஆயிரம் வைத்துள்ளேன். நான் குடியிருக்கும் வீட்டில் சடலத்தை வைக்க விரும்பவில்லை. தயவு செய்து எனது விருப்பத்தை நிறைவேற்றும்படி கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு கடிதத்தில் எழுதியிருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

* வசித்த வீட்டை சர்ச்சுக்கு எழுதிய முதியவர்

தற்கொலை செய்த முதியவர் சந்திரசேகரன் தன்னை அடக்கம் செய்ய செலவுக்கு, அவரது செல்போன் மூலம் பணம் எடுப்பதற்கு பாஸ்வேர்ட் நம்பரை பேப்பரில் எழுதி வைத்திருந்தார். அதேபோல், தனது பென்ஷன் புத்தகத்தை அலுவலகத்தில் ஒப்படைத்து விட்டு, பென்ஷனை ரத்து செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், அவர் வசித்து வந்த வீட்டை சர்ச்சுக்கு எழுதி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

 

Advertisement

Related News