தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

“மீலாதுன் நபி” திருநாளையொட்டி முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து!

 

Advertisement

சென்னை: அண்ணல் நபிகள் நாயகம் பிறந்த திருநாளாம் “மீலாதுன் நபி” திருநாள் உலகம் எங்கும் கொண்டாடப்படும் இந்த இனிய வேளையில் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகள் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தில் தெரிவித்ததாவது; அண்ணல் நபிகள் நாயகம் பிறந்த திருநாளாம் "மீலாதுன் நபி” திருநாள் உலகம் எங்கும் கொண்டாடப்படும் இந்த இனிய வேளையில் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மக்கள் நேர்வழி பெறுவதற்காக இறைவனால் அளிக்கப்பட்ட மாபெரும் அருட்கொடை நபிகள் நாயகம் அவர்கள். "குத்துச் சண்டையில் அடுத்தவரை வீழ்த்துபவர் வீரர் அல்ல; மாறாக, கோபம் வரும் போது தன்னைத்தானே அடக்கிக் கொள்பவரே வீரர்” என்கிறார் நபிகள் நாயகம் அவர்கள். கோபம்தான் நாகரிகமற்ற வார்த்தைகளை பிரயோகிக்க தூண்டுகிறது. இந்தக் கோபம்தான் பகைமையையும், வெறுப்பையும் உருவாக்குகிறது. “பூமியில் உள்ளவர்களிடம் கருணையுடன் நடந்து கொள்ளுங்கள். வானத்தில் உள்ளவர் உங்கள்மீது கருணை காட்டுவார்” என்றும் போதிக்கிறார் நபிகள் நாயகம் அவர்கள்.

கோபத்தை அடக்கி கருணை காட்டுவதன்மூலம் இறைவனின் கருணை அனைவருக்கும் கிடைக்கும் என்பதோடு, அமைதியும், ஆனந்தமும் பெருகும். நபிகள் நாயகம் பிறந்த இந்த நன்னாளில் கோபத்தை அடக்கி எல்லோரிடமும் கருணை காட்ட நாம் அனைவரும் உறுதி ஏற்போம். இந்த இனிய நாளில், இறைத் தூதரின் பொன்மொழிகளைப் பின்பற்றி எல்லாம்வல்ல இறைவனின் திருவருளை அனைவரும் பெற்றிட வேண்டும் என்ற என்னுடைய விருப்பத்தினைத் தெரிவித்து, இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை எனது இனிய “மீலாதுன் நபி” நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

 

Advertisement

Related News