தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

முதியவர்களிடம் கோடிக்கணக்கில் பண மோசடி; மாஜி நடிகை, தந்தை, சகோதரன் கைது: மும்பை போலீஸ் அதிரடி நடவடிக்கை

மும்பை: அதிக வட்டி தருவதாகக் கூறி முதியவர்களிடம் கோடிக்கணக்கில் மோசடி செய்த வழக்கில், முன்னாள் நடிகையும் ஆடை வடிவமைப்பாளருமான மசுமி மேவாவாலா தனது குடும்பத்தினருடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

Advertisement

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையைச் சேர்ந்த முன்னாள் நடிகையும், பிரபல ஆடை வடிவமைப்பாளருமான மசுமி மேவாவாலா (33), அவரது தந்தை ராஜேஷ் மேவாவாலா (55) மற்றும் சகோதரன் பார்கவ் (23) ஆகியோர் மீது அடுக்கடுக்கான பணமோசடி புகார்கள் எழுந்துள்ளன. இவர்கள் முதியவர்களைக் குறிவைத்து, குறிப்பிட்ட தொழிலில் முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாக ஆசை வார்த்தை கூறி பணத்தை வசூலித்துள்ளனர்.

குறிப்பாக அறுவை சிகிச்சை மற்றும் வணிக முதலீடுகள் எனக் காரணம் காட்டிப் பலரிடம் பணம் பெற்றுத் திரும்பத் தராமல் ஏமாற்றியதாகவும், ஏற்கனவே 2023ல் இதேபோன்ற வழக்கில் ஜாமீனில் வெளிவந்த ராஜேஷ் தொடர்ந்து மோசடியில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், 60 வயதுடைய பெண் ஒருவரிடம் ரூ.1.17 கோடி மோசடி செய்ததாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், போலியான ஆவணங்களைப் பயன்படுத்தி பாதிக்கப்பட்டவர் பெயரிலேயே வங்கிக் கடன் வாங்கியது அம்பலமானது. இதையடுத்து லோயர் பரேல் பகுதியில் உள்ள வீட்டில் பதுங்கியிருந்த மசுமி மற்றும் அவரது குடும்பத்தினரை போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர். இவர் மீது தற்போது வரை 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், ‘மோசடி செய்யப்பட்ட பணம் எங்கு மாற்றப்பட்டுள்ளது’ என்பது குறித்து போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement