தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அமெரிக்க முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் வீட்டில் புலனாய்வு துறை விசாரணை: இந்தியாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்தவர்

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்பின் முந்தைய ஆட்சியின் போது கடந்த 2018 முதல் 2019 வரை டிரம்பின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக பணியாற்றிவர் ஜான் போல்டன். 2020ம் ஆண்டு அவர் எழுதிய த ரூம் வயர் இட் ஹேப்பென்ட் புத்தகத்தில் ரகசிய தகவல்களைப் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டார். புத்தகம் வெளியிடுவதைத் தடுக்க டிரம்ப் முயற்சிகள் மேற்கொண்டார். அண்மையில் அமெரிக்க தொலைக்காட்சிக்கு ஜான் போல்டன் பேட்டியளிக்கையில் ,இந்தியாவிற்கு எதிரான வரிகள் மூலம் ரஷ்யாவை காயப்படுத்த வேண்டும் என்று டிரம்ப் நினைக்கிறார். ஆனால் இது இந்தியாவை ரஷ்யாவுடனும், சீனாவுடனும் நெருக்கமாக கொண்டு சென்று, இந்த வரிகளை எதிர்க்க வைக்கலாம்.

Advertisement

ரஷ்ய எண்ணெயை வாங்கியதற்காக சீனாவுக்கு டிரம்ப் சலுகை காட்டுவது, இந்தியா மீது வரி விதிப்பது ஒரு பெரிய தவறு. இது அமெரிக்காவிற்கு முற்றிலும் எதிர் விளைவை ஏற்படுத்தும் என்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில் மேரிலேண்டில் உள்ள ஜான் போல்டனின் வீட்டில் அமெரிக்க புலனாய்வு அதிகாரிகள் நேற்று சோதனை மேற்கொண்டனர்.அமெரிக்க புலனாய்வு பிரிவு இயக்குனர் காஷ் படேல் உத்தரவின்படி இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காஷ் படேல் எக்ஸ் தளத்தில் பதிவிடுகையில்,யாரும் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல.எப்பிஐ அதிகாரிகள் பணியில் உள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Related News