தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மாஜி அதிபர்களுக்கு வழங்கப்படும் சிறப்பு சலுகைகள் ரத்து: இலங்கையில் சட்டம் நிறைவேற்றம்

கொழும்பு: இலங்கையில் மாஜி அதிபர்களுக்கு வழங்கப்படும் சிறப்பு சலுகைகளை ரத்து செய்யும் சட்டம் நாடாளுமன்றத்தில் நேற்று நிறைவேற்றப்பட்டது. இலங்கையில் முன்னாள் அதிபர்களுக்கான சிறப்பு சலுகைகளை திரும்ப பெறும் மசோதாவை நாடாளுமன்றத்தில் எளிய பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முடியும். மசோதாவின் எந்தவொரு விதியும் அரசியலமைப்பின் விதிகளுடன் முரண்படவில்லை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Advertisement

இந்த நிலையில் அதிபர்களுக்கான சிறப்பு சலுகைகளை திரும்ப பெறும் மசோதா நேற்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு விவாதங்கள் நடந்தன. அதன் பிறகு மசோதா நிறைவேற்றப்பட்டது. மசோதாவுக்கு ஆதரவாக 151 பேர் வாக்களித்தனர். ஒருவர் எதிராக வாக்களித்தார். இது குறித்து சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் ஹர்ஷனா நாணயக்காரா,‘‘ இந்த சட்டத்தின் மூலம் மாஜி அதிபர்கள் தங்களுடைய ஓய்வூதியத்தை இழக்க மாட்டார்கள்.

ஆனால் அரசு பங்களா,அரசு போக்குவரத்து, பணியாளர்கள் போன்ற சிறப்பு உரிமைகள் வழங்கப்படமாட்டாது என்றார். இலங்கையில் முன்னாள் அதிபர்களுக்கு வழங்கப்படும் சிறப்பு சலுகைகள் ரத்து செய்யப்படும் என்று ஆளும் தேசிய மக்கள் சக்தி கட்சி(என்பிபி) தனது தேர்தல் வாக்குறுதியில் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement