தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

செங்கோட்டையனுக்கு ஆதரவாக மாஜி எம்பி சத்தியபாமா உள்பட 2000 பேர் ராஜினாமா கடிதம்

முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 8 பேர் கட்சி பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ள நிலையில், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக ஒன்றிய, நகர கிளை நிர்வாகிகள் தங்களையும் கட்சி பதவியில் இருந்து நீக்க வலியுறுத்தி எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதி உள்ளனர். மாவட்ட மகளிர் அணி செயலாளரும், முன்னாள் எம்பி.யுமான சத்தியபாமா, ஐ.டி பிரிவு செயலாளர் செந்தில்குமார், மாவட்ட எம்ஜிஆர் அணி இணை செயலாளர் அருள் ராமச்சந்திரன், கோபி நகரச் செயலாளர் கணேஷ், பேரூராட்சி செயலாளர்கள் 6 பேர் உட்பட அதிமுக ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட நிர்வாகிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் தனித்தனியாக கடிதங்களை எழுதி எடப்பாடி பழனிசாமிக்கு அனுப்பினர்.

Advertisement

இதேபோன்று நம்பியூர் ஒன்றிய நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள், தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் அனைத்து பொறுப்புகளில் உள்ள நிர்வாகிகள் சுமார் 1000க்கும் மேற்பட்ட அதிமுகவினர் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். அந்த கடிதத்தை அதிமுக தலைமை அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தனர். இதேபோன்று கோபி நகர மற்றும் மேற்கு ஒன்றிய நிர்வாகிகள் சுமார் 1000-க்கும் மேற்பட்டோர் தங்களது கட்சி பொறுப்புகளை ராஜினாமா செய்து கடிதத்தை எடப்பாடி பழனிசாமிக்கு அனுப்பி வைத்தனர். மொத்தம் 2000க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் எடப்பாடிக்கு ராஜினாமா கடிதம் அனுப்பி உள்ளனர். தொடர்ந்து அணி அணியாக அதிமுக தொண்டர்கள் கே.ஏ.செங்கோட்டையனுக்கு ஆதரவாக கட்சி பொறுப்புகளை துறந்து வருகின்றனர்.

Advertisement

Related News