தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆந்திராவில் நடந்த தேர்தலின்போது வாக்குப்பதிவு இயந்திரத்தை உடைத்த வழக்கில் முன்னாள் எம்எல்ஏ கைது

Advertisement

திருமலை: ஆந்திராவில் கடந்த மே 13ம் தேதி சட்டமன்றம், நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்தது. அப்போது பல இடங்களில் வன்முறைச் சம்பவங்கள் அரங்கேறியது. பல்நாடு மாவட்டம் மச்சர்லா தொகுதி ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் அப்போதைய எம்எல்ஏவும், வேட்பாளருமான பின்னெல்லி ராமகிருஷ்ண ரெட்டி வாக்குப்பதிவு நடந்து கொண்டிருந்தபோது பால்வாகேட் வாக்குச்சாவடி மையத்திற்குள் அத்துமீறி நுழைந்தார். அப்போது, எம்.எல்.ஏ வந்ததை கண்ட வாக்குச்சாவடி ஊழியர்கள் எழுந்து நின்று கும்பிட்டனர். ஆனால் பின்னெல்லி ராமகிருஷ்ண ரெட்டி நேராக வாக்குப்பதிவு அறைக்கு சென்று மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை தூக்கி தரையில் போட்டு உடைத்து நொறுக்கினார். தேர்தலில் தோல்வி அடைந்த பின்னெல்லி ராமகிருஷ்ண ரெட்டி தலைமறைவானார்.

இந்நிலையில் ேமலும், பின்னெல்லி ராமகிருஷ்ணா ரெட்டி மீது 10 பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இதற்கிடையில், 4 வழக்குகளில் கைதாகாமல் இருக்க பின்னெல்லி ராமகிருஷ்ணா ரெட்டி முன் ஜாமின் பெற்று மாச்சர்லா வந்தார். அதன்பிறகு இரண்டு முறை ஜாமீன் நீடிக்கப்பட்டது. இந்நிலையில் முன்ஜாமீனை ஐகோர்ட் நேற்று ரத்து செய்தது. இதனையடுத்து பின்னெல்லி ராமகிருஷ்ணா ரெட்டியை போலீசார் கைது செய்து நரச ராவ்பேட்டை எஸ்பி அலுவலகத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர்.

Advertisement