தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேடு வழக்கு முன்னாள் ஐஏஎஸ் அதிகாரிகள் உட்பட 4 பேர் விடுதலை: குற்றச்சாட்டுகளுக்கு எதிரான ஆதாரங்களை சிபிஐ தாக்கல் செய்யவில்லை

புதுடெல்லி: சட்டீஸ்கரில் உள்ள பதேபூர் கிழக்கு நிலக்கரி சுரங்க தொகுதியை ஆர்கேஎம் பவர்ஜென் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு ஒதுக்கியதில் முறைகேடுகள் நடந்ததாக கடந்த 2014ம் ஆண்டு சிபிஐ வழக்கு பதிவு செய்தது. இது தொடர்பாக முன்னாள் ஒன்றிய நிலக்கரி துறை செயலாளர் எச்.சி.குப்தா, இணை செயலாளர் குல்ஜீத் சிங் குரோபா, பவர்ஜென் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குனர்கள் ஆண்டாள் ஆறுமுகம்,சிங்காரவேல் உள்ளிட்டோர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது. 3 ஆண்டுகளுக்கு பிறகு சிபிஐ தனது இறுதி அறிக்கையை தாக்கல் செய்த சிபிஐ முதல் அறிக்கையில் உள்ள குற்றச்சாட்டுகள் ஊழல் தடுப்பு சட்டம், 1988ன் விதிகளின்படி நிரூபிக்கப்படவில்லை என குறிப்பிட்டிருந்தது. இதில் திருப்தி அடையாத டெல்லி சிறப்பு நீதிமன்றம், மேலும் விசாரணை நடத்தும் படி சிபிஐக்கு உத்தரவிட்டது.

Advertisement

அதன் பிறகு மீண்டும் விசாரணையை நடத்திய சிபிஐ 6 ஆண்டுகளுக்கு பின்னர் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. அதில், ஆர்கேஎம் பவர்ஜென் நிறுவன இயக்குனர்கள்,நிலக்கரி சுரங்கத்தை பெறுவதற்காக போலி ஆவணங்களை சமர்ப்பித்து அரசாங்கத்தை ஏமாற்றியதாக குற்றம் சாட்டியது. இந்த வழக்கை சிறப்பு நீதிமன்ற நீதிபதி தீரஜ் மோர் விசாரித்து வந்தார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, சிபிஐ குற்ற பத்திரிகையில் குறிப்பிடப்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் குப்தா, குரோபா மற்றும் ஆர்கேஎம் பவர்ஜென் இயக்குனர்கள் மீதான குற்றச்சாட்டுகளுக்கு எதிரான எந்த ஆதாரங்களும் இல்லை என்றும் கூறி அவர்களை விடுதலை செய்ய உத்தரவிட்டார்.

Advertisement

Related News