தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆன்லைன் டிரேடிங் மூலம் பைனான்சியரிடம் ரூ.1.43 கோடி பறித்த முன்னாள் வங்கி மேலாளர் கூட்டாளியுடன் கைது: மத்திய குற்றப்பிரிவு நடவடிக்கை

 

Advertisement

சென்னை: ஆன்லைன் டிரேடிங் மூலம் பைனான்சியரிடம் ரூ.1.43 கோடி பறித்த முன்னாள் வங்கி மேலாளர் மற்றும் ஏற்றுமதி நிறுவன உரிமையாளர் ஆகிய 2 பேரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். சென்னை பெருங்குடி பகுதியை சேர்ந்தவர் கார்த்திக்(36). இவர் பெரிய அளவில் பைனான்ஸ் தொழில் நடத்தி வருகிறார். கடந்த மார்ச் மாதம் சமூக வலைத்தளத்தில் வந்த ஆன்லைன் முதலீட்டு வர்த்தக விளம்பரத்தை பார்த்து, அதை தொடர்பு கொண்டு வாட்ஸ் அப் குழு ஒன்றில் இணைந்துள்ளார். அந்த குழுவில் மோசடி நபர்கள் அனுப்பிய லிங் மூலமாக முதலீட்டு செயலி ஒன்றை பதிவிறக்கம் செய்து, அதில் முதலீடு செய்யும் பணத்திற்கு அதிக லாபம் கிடைக்கும் என்று சந்தேக நபர்கள் சொன்ன ஆசை வார்த்தைகளை நம்பி பல்வேறு வங்கி கணக்குக்கு ரூ.1,43,06,211 பணம் செலுத்தியுள்ளார்.

முதலில் அவர் செலுத்திய பணத்திற்கு லாபம் வருவது போல் எதிர்தரப்பில் பணம் பைனான்சியர் வங்கி கணக்கிற்கு அனுப்பியுள்ளனர். அந்த பணத்தை பைனான்சியர் எடுக்க முயன்ற போது, பல்ேவறு காரணங்களை கூறி பணம் எடுக்க முடியாத அளவில் வங்கி கணக்கை முடக்கி பணம் மோசடி செய்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த பைனான்சியர் கார்த்திக் கடந்த மாதம் 16ம் தேதி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்க மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் ராதிகாவுக்கு கமிஷனர் அருண் உத்தரவிட்டார். அதன்படி மத்திய குற்றப்பிரிவு போலீசார், பணம் பரிமாற்றம் செய்யப்பட்ட வங்கிகணக்கு விபரங்களை வைத்து விசாரணை நடத்திய போது, சூர்யா ஏற்றுமதி இறக்குமதி நிறுவனத்தின் உரிமையாளர் சூர்யா சீனிவாஸ்(50) என்பவர், பைனான்சியர் கார்த்திக்கை ஏமாற்றியது தெரியவந்தது.

அதைதொடர்ந்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் சூர்யா சீனிவாசை கைது செய்து விசாரணை நடத்திய போது, ஈக்காட்டுத்தாங்கல் பகுதியில் உள்ள தனியார் வங்கியின் முன்னாள் மேலாளர் சேஷாத்ரி எத்திராஜ்(43) என்பவர் மூலம் மோசடி செய்த பணத்தை பல்வேறு வங்கிக்கு மாற்றி பறித்தது தெரியவந்தது. அதைதொடர்ந்து மத்திய குற்றப்பிரிவு போலீசார், சைதாப்பேட்டையை சேர்ந்த தனியார் வங்கியின் முன்னாள் மேலாளர் சேஷாத்ரி எத்திராஜை நேற்று கைது செய்தனர். அவர்களிடம் இருந்து பணம் மோசடிக்கு பயன்படுத்திய 3 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் கைது செய்யப்பட்ட முன்னாள் வங்கி மேலாளர் மற்றும் ஏற்றுமதி நிறுவன உரிமையாளர் சூர்யா சீனிவாஸ் ஆகியோரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Advertisement

Related News