தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அதிமுக மாஜி அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் ஆதரவாளர் வீடுகளில் ரெய்டு: கரூர், நாமக்கல், திண்டுக்கல்லில் அதிரடி

சென்னை: கரூர் மாவட்டம் வாங்கல் குப்பிச்சிபாளையத்தை சேர்ந்த தொழிலதிபர் பிரகாஷிடம் ரூ.100 கோடி மதிப்பிலான 22 ஏக்கர் நிலத்தை அபகரிப்பு மற்றும் கொலை மிரட்டல் புகாரில் கைதான அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஜாமீனில் உள்ளார். இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக, கரூர் மாவட்டம் முஷ்டகிணத்துப்பட்டியில் உள்ள விஜயபாஸ்கரின் சகோதரர் சேகரின் உறவினரான காண்ட்ராக்டர் மணியின் தோட்டத்து வீட்டில் நேற்று சிபிசிஐடி போலீசார் சோதனை நடத்தினர். அவரிடம், விஜயபாஸ்கரின் சகோதரர், பண பரிவர்த்தனை மேற்கொண்டிருந்தாரா? என விசாரித்தனர்.
Advertisement

நாமக்கல்லில் உள்ள திருச்சி ரோடு பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்(55). தொழிலதிபரான இவர், நாமக்கல்-சேலம் ரோட்டில் கட்டுமான நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு நெருக்கமானவர் என கூறப்படுகிறது. இதையடுத்து நாமக்கல் மற்றும் கரூர் மாவட்ட சிபிசிஐடி போலீசார் இவரது அலுவலகத்திற்கு நேற்று பிற்பகல் சென்று ஆவணங்கள், வங்கி கணக்குகள் மற்றும் கம்ப்யூட்டர் பதிவுகளை சோதனை செய்தனர். பின்னர் மோகனூர் ரோட்டில் உள்ள கலைவாணி நகரில் உள்ள அவரது வீட்டிலும் சோதனை நடத்தி, சில ஆவணங்களை போலீசார் எடுத்துச் சென்றனர்.

திண்டுக்கல் நேருஜி நகர் முனிசிபல் காலனியில் உள்ள தனியார் நிறுவனத்திலும் நேற்று சிபிசிஐடி போலீசார் சென்று, ரூ.50 லட்சம் பண பரிவர்த்தனை தொடர்பாக சோதனையில் ஈடுபட்டனர். இதில் சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. மேலும், தாடிக்கொம்புவில் உள்ள குடோனிலும் சோதனை நடத்தினர். இதேபோன்று குஜிலியம்பாறை ஒன்றியம், லந்தக்கோட்டை மாணிக்கபுரத்தில், எம்.ஆர்.விஜயபாஸ்கரின் உறவினருக்கு சொந்தமான நூற்பாலையிலும் சிபிசிஐடி போலீசார் நேற்று சோதனை நடத்தினர்.

Advertisement