முன்னாள் பிரதமர் தேவகவுடா பேரன் பிரஜ்வல் மீதான பாலியல் வழக்கு ஜூலை 30 தீர்ப்பு அறிவிப்பு
Advertisement
வழக்கில் 180 ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்கு விசாரணை மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. விசாரணை நிறைவடைந்ததை ெதாடர்ந்து நீதிபதி சந்தோஷ் கஜானன் பட் ஜூலை 30ம் தேதி தீர்ப்பை அறிவிப்பதாக கூறியுள்ளார். இரண்டு ஆண்டுகளாக பரப்பன அக்ரஹார சிறையில் இருக்கும் பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிரான வழக்கில் தீர்ப்பு என்னவாக இருக்கும் என்பதில் தீவிர ஆர்வம் நிலவுகிறது. குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், அதிகபட்சமாக ஆயுள் தண்டனையும் விதிக்கப்படும்.
Advertisement