தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பிரான்ஸ் முன்னாள் அதிபர் சர்கோசி சிறையில் அடைப்பு

பாரிஸ்: நிகோலஸ் சர்க்கோசி(70) கடந்த 2007ம் ஆண்டு முதல் 2012ம் ஆண்டு வரை பிரான்ஸ் அதிபராக பதவி வகித்து வந்தார். இவர் மேற்கத்திய நாடுகளுடன் லிபியா நாட்டுக்கு நல்லுறவு ஏற்படுத்தி தருவதாக கூறி, லிபியா முன்னாள் அதிபர் மொய்மர் கடாபியிடமிருந்து சட்டவிரோதமாக நிதி உதவி பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், அந்த நிதியை 2007ம் ஆண்டு பிரான்சில் நடந்த அதிபர் தேர்தல் பிரசாரத்தில் முறைகேடாக பயன்படுத்தியதாகவும் நிகோலஸ் சர்கோசி மீது குற்றச்சாட்டு எழுந்தது. இந்த குற்றச்சாட்டுகளை நிகோலஸ் மறுத்து வந்தார்.

Advertisement

இதுதொடர்பாக பாரிஸ் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது. இந்த வழக்கில் பாரிஸ் நீதிமன்றம், நிகோலஸ் சர்கோசி மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி, அவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தும், அத்துடன் ஒரு லட்சம் யூரோ அபராதம் விதித்து கடந்த செப்டம்பர் 25ம் தேதி தீர்ப்பு வழங்கியது.

இந்நிலையில் நிகோலஸ் சர்கோசி நேற்று பாரிசில் உள்ள லா சாண்டி சிறையில் அடைக்கப்பட்டார்.

பாதுகாப்பு காரணங்களுக்காக சர்கோசி தனி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனிடையே சிறை தண்டனையை எதிர்த்து நிகோலஸ் சர்கோசி தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரான்ஸ் நாட்டு வரலாற்றில் முன்னாள் அதிபர் ஒருவர் சிறையில் அடைக்கப்படுவது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Related News