தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வெளி மாநில பொருட்களுக்கு அதிக வரி விதிக்க முடியாது: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

புதுடெல்லி: ராஜஸ்தான் மாநிலத்திற்குள் உற்பத்தி செய்யப்படும் ஆஸ்பெஸ்டாஸ் சிமென்ட் ஷீட்ஸ்களுக்கு அம்மாநில அரசு கடந்த 2017ம் ஆண்டு ‘வாட் வரி’ விலக்கு அளித்ததற்கு எதிராக பிற மாநிலங்களின் உற்பத்தியாளர்கள் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து முன்னதாக இந்த வழக்கானது உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது,‘‘மாநிலத்திற்குள் தயாரிக்கப்படும் பொருளுக்கு ஒரு வரியும், மாநிலத்திற்கு வெளியே தயாரிக்கப்படும் பொருளுக்கு ஒரு வரி எனவும் வரி பாகுபாட்டை ராஜஸ்தான் அரசு கையாள்வதாக மனுதாரர்கள் குற்றம் சாட்டியிருந்தார்கள். இதையடுத்து வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

Advertisement

இந்த நிலையில் மேற்கண்ட வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதி பி.வி.நாகரத்னா தலைமையிலான அமர்வில் நேற்று தீர்ப்பு வழங்கியது. அதில்,‘‘மாநில அரசுகள் தங்களது எல்லைக்குள் உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கு ஒரு வரியும், அதேப்போன்று மாநில எல்லைக்கு வெளியே உற்பத்தி செய்யப்படும் பொருளுக்கு ஒரு வரியும் என்று வரி பாகுபாடு காட்ட முடியாது. இதில் கடந்த 2017ம் ஆண்டு ராஜஸ்தான் அரசு கொண்டுவந்த இந்த முடிவு பாராபட்சமானது ஆகும். இது அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமானது என்பதால் அதனை உச்ச நீதிமன்றம் ரத்து செய்கிறது. இதேபோல், இறக்குமதி செய்யப்பட்ட பொருளுக்கும், உள்ளூரில் உற்பத்தி செய்யப்பட்ட பொருளுக்கும் இடையே பாகுபாடு காட்ட முடியாது என நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

Advertisement