தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தூத்துக்குடியிலிருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.70 லட்சம் வெளிநாட்டு சிகரெட்டுகள் சிக்கின: டிரைவர் கைது; கார் பறிமுதல்

தூத்துக்குடி: தூத்துக்குடியிலிருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.70 லட்சம் வெளிநாட்டு சிகரெட்டுகள் சிக்கின. மரைன் போலீசார் மறித்து சோதனையிட்ட போது காரிலிருந்து குதித்த டிரைவர் கைது செய்யப்பட்டார். கார் பறிமுதல் செய்யப்பட்டது. தூத்துக்குடி மரைன் இன்ஸ்பெக்டர் பேச்சிமுத்து உத்தரவின் பேரில் விளாத்திகுளம் அருகே வேம்பார் சோதனை சாவடியில் எஸ்ஐ செல்வராஜ் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது நாகர்கோவிலில் இருந்து கார் ஒன்று வந்து கொண்டிருந்தது. அந்த காரை மறித்து மரைன் போலீசார் சோதனையிட்டனர். அப்போது தப்பியோட முயன்ற டிரைவரை மடக்கிப் பிடித்தனர்.

Advertisement

விசாரணையில் டிரைவர் கன்னியாகுமரி மாவட்டம், அஞ்சிகிராமத்தைச் சேர்ந்த ராஜேஷ் என்பதும் தெரியவந்தது. காரில் இருந்த 32 மூடைகள் பாலிதீன் பையால் பேக் செய்யப்பட்டிருந்தன. பாலிதீன் பையை திறந்து பார்த்ததில் அதில் இங்கிலாந்து நாட்டின் சிகரெட்டான, ‘‘ மான்செஸ்டர் யுனைடெட் கிங்டம்’’ என்ற பிராண்ட் சிகரெட்டுகள் இருந்தன. மொத்தம் 6 லட்சத்து 40 ஆயிரம் சிகரெட்டுகளை மரைன் போலீசார் பறிமுதல் செய்தனர். இதன் மொத்த மதிப்பு ரூ. 70 லட்சம் ஆகும். விசாரணையில் நாகர்கோவிலில் இருந்து கடற்கரை சாலை வழியாக தூத்துக்குடி இந்தக் கார் வந்தது தெரியவந்தது.

Advertisement