தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வெளிமாநிலங்களுக்கு 600 பேருந்துகள் இயக்கப்படமாட்டாது: ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு

சென்னை: வெளிமாநிலங்களுக்கு 600 ஆம்னி பேருந்துகள் இயக்கப்படமாட்டாது என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் இருந்து, கடந்த 7ம் தேதி கேரள மாநிலம் சென்ற தமிழக ஆம்னி பஸ்களுக்கு, அம்மாநில போக்குவரத்து அதிகாரிகள், 70 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதித்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அனைத்து ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கத்தினர், வெளி மாநிலங்களுக்கு ஆம்னி பஸ்கள் இயக்குவதை நிறுத்தினர். ஆனால், இப்பிரச்னைக்கு இதுவரை தீர்வு எட்டப்படவில்லை.

Advertisement

இதுகுறித்து, ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கம் கூறுகையில்,

ஆம்னி பேருந்துகளுக்கு அபராதம் விதிப்பதால் பேருந்துகளை இயக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

7 நாட்களாக நடைபெற்று வரும் வேலை நிறுத்தத்தால் ரூ.22 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. ஸ்டிரைக்கால் 20,000க்கும்மேற்பட்ட ஆம்னி பேருந்து தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளா, கர்நாடக அரசுகளுடன் முதலமைச்சர் பேசி, சாலை வரியில் இருந்து விலக்குதர வழிவகை செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர். முதலமைச்சர் இப்பிரச்சனையில் தலையிட்டு நல்ல தீர்வை ஏற்படுத்தி தர வேண்டும். தீர்வு ஏற்படும்வரை வெளிமாநிலங்களுக்கு இயக்கப்பட வேண்டிய 600 ஆம்னி பேருந்துகள் இயங்காது என தெரிவித்தனர்.

Advertisement

Related News