தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

உணவு சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பும், பின்பும் டீ, காபி குடிக்க வேண்டாம் : இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் எச்சரிக்கை

டெல்லி : உணவு சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பும், பின்பும் டீ, காபி குடிக்க வேண்டாம் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் அறிவுறுத்தி உள்ளது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம், தேசிய ஊட்டச்சத்து நிறுவனம் (NIN) உடன் இணைந்து, நாடு முழுவதும் ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை மேம்படுத்துவதற்காக இந்திய குடிமக்களுக்கு 17 புதிய உணவு வழிகாட்டுதல்களை வெளியிட்டது. அதன்படி, உணவு சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பும், பின்பும் டீ, காபி குடிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. உணவில் இருந்து உடலுக்குச் செல்லும் இரும்புச் சத்துக்கள் இந்த டீ, காபி பானங்களால் தடைபடக்கூடும் எனவும் இதனால் அனீமியா போன்ற உடல்நலக்குறைபாடு ஏற்படலாம் எனவும் ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. மேலும் அதிக காபி குடிப்பது ரத்த அழுத்தத்தை ஏற்படுத்தும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Advertisement

ஓரு நாளைக்கு 300 மில்லி கிராம் அளவுக்கு மேல் காஃபின் உட்கொள்ள கூடாது என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. 150 மில்லி காய்ச்சிய காபியில் 80 முதல் 120 மில்லிகிராம் காஃபின் உள்ளது, அதே நேரத்தில் இன்ஸ்டன்ட் காபியில் 50 முதல் 65 மில்லிகிராம் காஃபின் வரை உள்ளது. அதேபோல, ஒரு டீயில் 30 முதல் 65 மில்லிகிராம் காஃபின் உள்ளது. மேலும் மக்கள் பால் இல்லாமல் தேநீர் அருந்துமாறு ஐசிஎம்ஆர் பரிந்துரைத்துள்ளது. பால் இல்லாமல் தேநீர் அருந்துவது மூலம் ரத்த ஓட்டம் சீராகிறது எனவும் வயிற்று புற்றுநோய் ஏற்படுவதறகான வாய்ப்பு குறைகிறது என்றும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.அது மட்டுமல்லாமல் தேநீர் மற்றும் காபி குடிப்பதை கட்டுப்படுத்தி, பழங்கள், காய்கறிகள், தானியங்கள், இறைச்சிகள் மற்றும் கடல் உணவுகளை சாப்பிடலாம் என்றும் அதே நேரத்தில் எண்ணெய், சர்க்கரை மற்றும் உப்பு நிறைந்த உணவுகளை குறைவான அளவே எடுத்து கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Related News