தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

காரங்காடு - காட்டுவிளை - ஆளூர் சாலையில் திறந்தவெளியில் கொட்டப்படும் உணவு, இறைச்சி கழிவுகள்: சுகாதார சீர்கேட்டால் மக்கள் அவதி

திங்கள்சந்தை: கட்டிமாங்கோடு ஊராட்சிக்கு உட்பட்ட காரங்காடு - காட்டுவிளை - ஆளூர் சாலையில் திறந்தவெளியில் உணவு, இறைச்சி உள்ளிட்ட கழிவுகளை கொட்டுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றியம் கட்டிமாங்காடு ஊராட்சி மன்றம் காரங்காட்டில் இருந்து காட்டுவிளை வழியாக ஆளூர் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையை காரங்காடு, தெற்கு மணக்காவிளை, கடுவாவிளை, காட்டுவிளை, ஆளூர் உள்ளிட்ட பகுதி மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் இந்த சாலை ஓரம் காரங்காடு பகுதியில் குப்பைகளை கொட்டும் சம்பவம் நடந்து வருகிறது. கட்டிமாங்கோடு ஊராட்சி பகுதியில் இருந்து சேமிக்கப்படும் குப்பைகள் இந்த சாலையின் வளைவு பகுதியில் குவித்து வைக்கப்படுவதும், பின்பு எரிக்கப்படுவதும் அடிக்கடி நடந்து வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்த குப்பைகள் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதால் மக்கள் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. அதேபோன்று தெரு நாய்கள் குப்பைகள், இறைச்சி, உணவு கழிவுகளை கிளறுவதால் தெருநாய் அச்சமும் ஏற்பட்டுள்ளது. இவை இழுத்து செல்லும் உணவு கழிவு உள்ளிட்ட குப்பைகள் அருகில் உள்ள ஊட்டு கால்வாய்கள் வழியாக தண்ணீரில் கலக்கிறது. இதனால் தண்ணீர் மாசடைந்து நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே இப்பகுதியில் கொட்டப்பட்டும் எரிக்கப்பட்டும் கிடக்கும் கழிவுகளை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். ஊராட்சி நிர்வாகம் சாலையோரம் குப்பைகளை கொட்டி எரிப்பதை நிறுத்துவதுடன், யாரும் குப்பைகளை கொட்டாதவாறு எச்சரிக்கை பலகை வைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related News