தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தமிழக அரசின் தடையை மீறி அச்சிடப்பட்ட காகிதத்தில் உணவுப்பொருள் பொட்டலம்

*அதிகாரிகள் கண்டுகொள்ளாததால் நோய்கள் பரவும் அபாயம்

Advertisement

சீர்காழி : மயிலாடுதுறை மாவட்டத்தில் அரசு விதித்த தடையை மீறி பழைய அச்சிடப்பட்ட காகிதத்தில் உணவுப்பொருட்கள் பொட்டலமிடப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

உணவகங்கள் மற்றும் தேனீர் கடைகளில் வழங்கப்படும் உணவுப் பதார்த்தங்கள் பழைய அச்சிடப்பட்ட தாள்களில் பொட்டலமிடக் கூடாது என இந்திய அரசின் உணவு பாது காப்பு ஆணையரகம் தடை விதித்துள்ளது. இதுதொடர்பாக தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட கலெக்டர்கள் மூலம் விழிப்புணர்வு மற்றும் எச்சரிக்கை விடுத்து அறிக்கை வெளியானது.

ஆனாலும் மயிலாடுதுறை மாவட்டத்தில் சீர்காழி, கொள்ளிடம், தரங்கம்பாடி, குத்தாலம், உள்ளிட்ட பகுதிகளில் பெட்டிக்கடைகள், டீ கடைகள், உணவு விடுதிகளில் வடை, பஜ்ஜி, போண்டா, பக்கோடா, இறைச்சி, மீன்கள் போன்ற உணவை, அச்சிடப்பட்ட தாள்களில் பயன்படுத்தப்படுகிறது. இதனால் சிறிது சிறிதாக விஷத்தை உண் பதற்கு சமமாகும். உணவு பொருட்களுடன், அச்சிடப்பட்ட தாள்களில் உள்ள மையானது சேர்ந்து மிகவும் தீவிரமான உடல் பாதிப்பையும், எதிர்மறையான விளைவுகளையும் ஏற்படுத்தும்.

உலோக அசுத்தங்களும், தீங்கு விளைவிக்கக்கூடிய தாலேட் போன்ற வேதிப்பொருள், கனிம எண்ணெய்களும் அச்சிட்ட காகிதத்தில் பொட்டலமிடப்படும் உணவில் காணப்படுவதால் அஜீரணக் கோளாறை உருவாக்கு வதோடு, கடுமையான விஷத் தன்மையையும் ஏற்படுத்துகிறது. நோய் எதிர்ப்பு சக்தி இழந்து, புற்றுநோய் உள்ளிட்ட நோய் தாக்குதல் ஏற்பட காரணமாகிறது.

இதுகுறித்து சீர்காழியை சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் கூறும்போது, ‘‘அரசு விதித்த தடை உத்தரவை மீறி இன்னமும் பழைய அச்சிடப்பட்ட தாளில் உணவுப்பொருட்களை பொட்டலமிட்டு வழங்கி வருகின்ற னர். இதுதொடர்பாக உணவுப் பாது காப்பு அலுவலர்களும் ஆய்வு நடத்தவில்லை. கண்காணிப்பு இல்லாத எந்த நடவடிக்கையும் பலன் தருவதில்லை. எனவே மக்களின் நலனை பாதுகாக்க வேண்டிய நடவடிக்கையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கவனம் செலுத்திட வேண்டும்,’’ என்றார்.

Advertisement

Related News