உணவே மருந்து
*சுக்கை தூள் செய்து சிறிதளவு அரிசி மாவில் சேர்த்து களியாக கிண்டி நெற்றியில் பற்று போட, கடுமையான தலைவலி குணமாகும்.
* எலுமிச்சம் பழச் சாறுடன் சிறிது உப்பைக் கலந்து பல் துலக்கினால் பற்களிலுள்ள கறை நீங்கி விடும்.
* ஜலதோஷம் ஏற்பட்டு மூச்சுத்திணறல் உண்டாகும் போது, ஓமத்தை ஒரு துணியில் முடிந்து மூக்கினால் உறிஞ்சினால் மூச்சுத் திணறலும், தலைவலியும் குணமாகும்.
*ஒற்றைத் தலைவலிக்கு கருஞ்சீரகத்தை மை போல் அரைத்து எருமைப் பாலுடன் சேர்த்துக் கலக்கி பின் அதனை நன்றாக காய்ச்சி நெற்றி, தலைப்பகுதிகளில் பற்றாகப் போட ஒற்றைத் தலைவலி குணமாகும்.
* மாதவிலக்கின்போது இரத்தப் போக்கு அதிகமானால் சாதம் வடித்த கஞ்சியில் அரைக் குவளை எடுத்து அதில் மோர் விட்டு பருகிவர, அதிக இரத்தப் போக்கு மட்டுப்படும். வயிற்று வலியும் தீரும்
* வெந்தயத்தை தண்ணீர் விட்டு அரைத்து நெருப்புப் பட்ட புண், கொதிக்கும் தண்ணீர் பட்ட புண், சூடான எண்ணெய் பட்ட புண் மேல் பூச எரிச்சல் தணிந்து ஆறும்.
* மிகுந்த தாகத்திற்கு சிறிது சீரகம் சேர்த்து தண்ணீர் பருக தீர்வு கிடைக்கும்.
* தும்பைப் பூவை நெய்விட்டு கிளறி ஒரு ஸ்பூன் அளவு சாப்பிட ஜன்னிக் காய்ச்சல் குணமாகும்.
*மழைக்காலங்களில் ஏற்படும் பசியின்மையைத் தடுக்க வெல்லத்துடன் சீரகத்தை சேர்த்து சாப்பிட பசி உண்டாகும்.
* எலுமிச்சம் பழச்சாற்றில் சம அளவு தேங்காய் எண்ணெயும், சந்தனமும் கலந்து இரவில் முகத்தில் பூசி வந்தால் பரு வந்ததனால் ஏற்பட்ட தழும்புகள் மறையும்.
* தேயிலை தண்ணீரில் ஒர் எலுமிச்சைப் பழத்தை சாறு பிழிந்து, நன்றாக சேரும் வரை ஆற்றிக் குடியுங்கள். விடாமல் ஏற்படும் வயிற்றுக் கடுப்பு நீங்கும்.
- எல். நஞ்சன், நீலகிரி