தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இந்திய உணவு கழகத்தில் வேலை வாங்கித்தருவதாக கூறி 44 பேரிடம் ரூ.3.50 கோடி மோசடி: கணவன், மனைவி கைது

வேலூர்: இந்திய உணவு கழகமான எப்சிஐயில் வேலைவாங்கித்தருவதாக கூறி பெண் உட்பட 44 பேரிடம் ரூ.3.50 கோடி வரை மோசடி செய்த கணவன், மனைவியை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த அரும்பருதியை சேர்ந்தவர் மஞ்சுளா(45). இவரது மகள் லிகிதா. இவர் திருமணமாகி ஆந்திர மாநிலம் சித்தூரில் வசித்து வருகிறார். இந்நிலையில் மஞ்சுளாவிடம் 2023ல் நண்பர் ஒருவர் மூலம் காட்பாடி அடுத்த இளையநல்லூரை சேர்ந்த ஈசாக்(66), அவரது மனைவி லதாமேரி(53) ஆகியோர் அறிமுகமாகியுள்ளனர். அவர்கள் மஞ்சுளாவின் மகள் லிகிதாவுக்கு இந்திய உணவு கழகத்தில் உதவி மேலாளர் வேலை வாங்கித்தருவதாக கூறி ரூ.17 லட்சத்தை பெற்றுள்ளனர்.

Advertisement

பல மாதங்களுக்கு பிறகு லிகிதாவுக்கு இந்திய உணவு கழகத்தில் உதவி மேலாளருக்கான பணியாணையை ஈசாக்கும், லதா மேரியும் வழங்கியுள்ளனர். அந்த ஆணையுடன் லிகிதா இந்திய உணவு கழகத்திற்கு சென்றபோது, அது போலியானது என்று தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த மஞ்சுளா, தான் கொடுத்த ரூ.17 லட்சத்தை திருப்பி கொடுக்கும்படி தம்பதியிடம் கேட்டுள்ளார். அவர்கள் உடனடியாக ரூ.10 லட்சத்துக்கான காசோலையை அளித்துள்ளனர். அதை வங்கியில் செலுத்தியபோது, பணம் இல்லை என்று திரும்பி வந்துள்ளது. மோசடி செய்யப்பட்டதை அறிந்த மஞ்சுளா வேலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து ஈசாக், அவரது மனைவி லதாமேரியை நேற்று கைது செய்து நடத்திய விசாரணையில், மஞ்சுளாவை போன்று 44 பேரிடம் வேலை வாங்கித்தருவதாக கூறி ரூ.3.50 கோடி வரை மோசடி செய்தது தெரியவந்தது.

Advertisement

Related News