தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

காய்ச்சல் பாதிப்பு உள்ளவர்கள் சுய மருத்துவம் செய்ய வேண்டாம் : சுகாதாரத்துறை அறிவுறுத்தல்

சென்னை: தமிழகத்தில் காய்ச்சல் பரவி வரும் நிலையில், பொதுமக்கள் சுய மருத்துவம் செய்ய வேண்டாம், என பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக வெயில் மற்றும் மழை என காலநிலை சீராக இல்லாத காரணத்தினால் காய்ச்சல் பாதிப்பு அதிகமாகி வருகிறது. இதனால், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற வருவோரின் எண்ணிக்கை அதிகரித்தவாறு இருக்கிறது.

Advertisement

இந்நிலையில் சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:

பொதுவாக ஜூலை மாதத்திற்கு பிறகு காலநிலை மாற்றத்தால் காய்ச்சல் அதிகரிப்பது இயல்பு தான். தற்போது உள்ள வெப்ப நிலை வைரஸ் வாழ தகுதியாக இருக்கும். தமிழகத்தில் பெரிய அளவில் பாதிப்பு இல்லை. எனவே மக்கள் அச்சப்பட தேவை இல்லை. இருப்பினும் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். பல வகை வைரஸ் நோய் உள்ளது. எச் 1 என் 1, இன்புளூயன்சா போன்ற வைரஸ் தான் இந்த காலத்தில் அதிகம் இருக்கும்.

புதிய வைரஸ் எதுவும் இல்லை. இந்த வைரஸ் தொற்றால் சளி, காய்ச்சல், உடல் வலி உள்ளிட்டவை ஏற்படும். இணை நோய் இல்லாதவர்கள் 3 முதல் 1 வாரத்தில் சரியாகி விடும். காய்ச்சல் உள்ளவர்கள் வீட்டிலேயே சுய மருத்துவம் செய்ய கூடாது, மருத்துவர்கள் அலோசனை படி மாத்திரை எடுத்துகொள்ள வேண்டும். பெரியவர்கள், கர்ப்பிணி தாய்மார்கள், குழந்தைகள் தான் அதிகம் பாதிக்க வாய்ப்புள்ளது. எனவே விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.

Advertisement

Related News