தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

விளைச்சல் பாதிப்பால் வரத்து குறைந்தது: திருச்சியில் பூக்கள் விலை இரு மடங்கு உயர்வு

திருச்சி: திருச்சியில் பூக்கள் விலை இரு மடங்கு உயர்ந்துள்ளது. திருச்சி காந்தி மார்க்கெட் பூ சந்தைக்கு பெங்களூரு, ஒசூர் பகுதிகளில் இருந்து ரோஜா பூக்களும், திருச்சி மாவட்டத்தில் சோமரசம்பேட்டை, எட்டரை, கோப்பு பகுதிகளிலிருந்து மல்லிகை பூக்களும், திண்டுக்கல், நிலக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து அரளி பூவும், பெரம்பலூரிலிருந்து சம்பங்கி பூக்களும் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. தற்போது, கடும் பனிப்பொழிவு நிலவுவதால் விளைச்சல் பாதிக்கப்பட்டு, பூக்களின் வரத்து குறைந்துள்ளது. இதன்காரணமாக பூக்களின் விலை உயர்ந்துள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன் ரூ.300க்கு விற்ற ஒரு கிலோ மல்லி ரூ.800க்கும், ரூ.500க்கு விற்ற கனகாம்பரம் ரூ.1000க்கும், ரூ.400க்கு விற்ற முல்லை ரூ.800க்கும், ரூ.400க்கு விற்ற ஜாதி மல்லி ரூ.700க்கும், ரூ.100க்கு விற்ற அரளி பூ ரூ.250க்கும், ரூ. 80க்கு விற்ற சாமந்தி ரூ.180க்கும், ரூ.60க்கு விற்ற சம்பங்கி ரூ.100க்கும், ரூ.80க்கு விற்ற பெங்களூரு ரோஸ் ரூ.150க்கும், ரூ.80க்கு விற்ற பன்னீர் ரோஸ் ரூ.130க்கும் இன்று விற்பனை செய்யப்படுகிறது. இதுகுறித்து பூ வியாபாரிகள் கூறுகையில், பனிப்பொழிவு காரணமாக வெளி மாநிலங்களில் இருந்து பூக்கள் வரத்து குறைந்துள்ளது. இதன்காரணமாக பூக்கள் விலை உயர்ந்துள்ளது என்றனர்.

Related News