தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆயுத பூஜையை முன்னிட்டு நிலக்கோட்டை சந்தையில் பூக்கள் விலை டபுளானது

நிலக்கோட்டை: ஆயுத பூஜை. விஜயதசமியை முன்னிட்டு நிலக்கோட்டை சந்தையில் பூக்கள் விலை இருமடங்கு உயர்ந்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் இயங்கி வரும் பூ மார்க்கெட் தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்றதாகும். உள்ளூர் மட்டுமின்றி மதுரை, தேனி உள்ளிட்ட வெளிமாவட்ட வியாபாரிகளும், கேரளா போன்ற வெளிமாநில வியாபாரிகளும் இங்கு வந்து பூக்களை வாங்கி செல்வது வழக்கம். நவராத்திரி விழா நாட்களில் நிலக்கோட்டை சந்தையில் பூக்களின் விலை உயர்ந்தது. இந்நிலையில், நாளை மறுதினம் ஆயுத பூஜை என்பதால் பூக்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஒரு கிலோ மல்லிகை ரூ.300 முதல் ரூ.400க்கு விற்கப்பட்டது. இந்நிலையில், தற்போது மல்லிகைப்பூ தரத்துக்கேற்ப ரூ.700 முதல் ரூ.800 வரை விற்கப்படுகிறது.

Advertisement

இதேபோல மற்ற பூக்களின் விலையும் இருமடங்கு உயர்ந்துள்ளது. விலை நிலவரம் (கிலோவில்) வருமாறு: முல்லை மற்றும் பிச்சிப்பூ ரூ.400 முதல் ரூ.500 வரை, சம்பங்கி ரூ.100 முதல் ரூ.150 வரை, கனகாம்பரம் ரூ.500, வைலட் செவ்வந்தி ரூ.150, செவ்வந்தி ரூ.130, வெள்ளை செவ்வந்தி ரூ.170, செண்டு மல்லி ரூ.100, வாடாமல்லி ரூ.90, கோழிக்கொண்டை ரூ.100, பன்னீர் ரோஜா ரூ.150, மருகு ரூ.160, மரிக்கொழுந்து ரூ.200, துளசி ரூ.70 என விற்பனையானது. ஆயுத பூஜை, விஜய தசமி நாட்களில் பூக்களின் விலை மேலும் உயர வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

Advertisement

Related News