கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்ந்தது
அண்ணாநகர்: விட்டுவிட்டு பெய்துவரும் மழையின் காரணமாக சென்னை கோயம்பேடு பூ மார்க்கெட்டில் அனைத்து பூக்களின் விலை உயர்ந்துள்ளது. இதன்படி, ஒரு கிலோ மல்லி 400 ரூபாயில் இருந்து 500க்கும் ஐஸ் மல்லி 300ல் இருந்து 400க்கும் முல்லை மற்றும் ஜாதிமல்லி 250ல் இருந்து 400க்கும் கனகாம்பரம் 600 ரூபாயில் இருந்து 800க்கும் அரளி பூ 200ல் இருந்து 300க்கும் சாமந்தி 200ல் இருந்து 240 க்கும் சம்பங்கி 100ல் இருந்து 200க்கும் சாக்லேட் ரோஸ் 140ல் இருந்து 160 க்கும் பன்னீர் ரோஸ் 100ல் இருந்து 120க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதுகுறித்து கோயம்பேடு பூ மார்க்கெட் துணை தலைவர் முத்துராஜ் கூறுகையில், ‘’மழை விட்டுவிட்டு பெய்து வருவதால் அனைத்து மக்களின் விலை உயர்ந்துள்ளது. வருகின்ற 8ம்தேதி வரலட்சுமி நோன்பு பண்டிகை என்பதால் நாளை முதல் மீண்டும் பூக்களின் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது. பூக்களின் விலை உயர்வால் வியாபாரிகள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்’ என்றார்.