தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வேலூரில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் சிறப்பு மருத்துவமுகாம் நடைபெற்றுவரும் நிலையில் மாவட்ட ஆட்சியர், மேயர் நேரில் ஆய்வு

வேலூர்: வேலூரில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் சிறப்பு மருத்துவமுகாம் நடைபெற்றுவரும் நிலையில் மாவட்ட ஆட்சியர் மற்றும் மேயர் நேரில் ஆய்வு செய்துவருகின்றனர். வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் தொடர் கனமழை காரணமாக வேலூர் மாவட்டத்தின் தாழ்வான பகுதிகளில் மழை நீரானது கழிவு நீருடன் சேர்ந்து குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்துள்ளது. இந்த நிலையில், வேலூர் மாநகராட்சிக்குட்பட்ட கன்சால்பேட்டை, இந்திராநகர், வீர ஆஞ்சநேயர் தெரு உள்ளிட்ட 7 இடங்களில் தண்ணீர் வடியாத சூழலில் அங்குள்ள மக்கள் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மேலும் அவர்களுக்கு நோய் பரவாமல் இருக்க சிறப்பு மருத்துவ முகாம்களை மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

Advertisement

இதனை வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி மற்றும் மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்தகுமார் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்ததோடு தண்ணீர் சூழ்ந்த பகுதிகளில் வீடுகளில் இருந்து வெளியேறாமல் உள்ள மக்களை நிவாரண முகாம்களில் வந்து தங்குமாறு அறிவுறுத்தினார். தொடர்ந்து அங்கு நடைபெறும் சிறப்பு மருத்துவ முகாம்களில் 20 சுகாதார அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் அந்த மக்களுக்கு காய்ச்சல் மற்றும் தொற்று நோய் ஏற்படாமல் இருக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

Advertisement