தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருப்பூர் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு: தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியது

Advertisement

திருப்பூர்: கோவை மாவட்டத்தில் உருவாகும் நொய்யல் ஆறு திருப்பூர், ஈரோடு வழியாக சென்று கரூரில் நிறைவடைகிறது. திருப்பூர் மாநகரில் சுமார் 13 கி.மீட்டர் நொய்யல் ஆறு பாய்கிறது. கோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை கடந்த 2 நாட்களாக தீவிரமாக பெய்து வருகிறது. இதன் காரணமாக கோவையில் நொய்யல் ஆறு மற்றும் அதன் கிளை வாய்க்காலில் நேற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. நொய்யல் ஆற்றில் வெள்ளம் அதிகரித்ததன் காரணமாக திருப்பூர் மாநகரின் வழியே பாயும் நொய்யல் ஆற்றிலும் வழக்கத்தைவிட தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்பட்டது.

இந்நிலையில் இன்று மேலும் நீர்வரத்து அதிகரித்ததால், திருப்பூர் அணைப்பாளையம் பகுதியில் உள்ள தரைப்பாலம் வெள்ள நீரில் மூழ்கியது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்திற்கு காவல்துறையினர் தடை விதித்துள்ளனர். தொடர்ந்து நொய்யல் ஆற்றில் அதிகரித்து வரும் தண்ணீரின் அளவு குறித்து பொதுப்பணி துறையினர் மற்றும் வருவாய் துறையினர் கண்காணித்து வருகின்றனர். நொய்யல் ஆற்றில் வெள்ளம் அதிகரிக்குமானால் அடுத்து மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Related News