தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடரும் கோடை மழையால் குத்திரபாஞ்சான் அருவியில் வெள்ளப்பெருக்கு: அனுமன் நதியில் தண்ணீர் கரைபுரண்டு ஓடியது

Advertisement

பணகுடி: மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்துவரும் கோடை மழையால் பணகுடியில் உள்ள அனுமன் நதியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. அத்துடன் குத்திரபாஞ்சான் அருவியில் கொட்டும் தண்ணீரால் சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தில் கோடை வெயில் வெளுத்து வாங்கிய நிலையில் கத்திரி வெயில் கடந்த 4ம் தேதி துவங்கியது. இதனால் மேலும் வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்குமோ என்ற அச்சத்தில் பொதுமக்கள் இருந்து வந்தனர். இந்நிலையில் கத்திரி வெயில் காலம் முடிவடைதற்குள் வழக்கத்துக்கு மாறாக கோடை மழை பெய்ய தொடங்கியது.

இதனால் படிப்படியாக வெப்பம் குறைந்து மாவட்டம் முழுவதும் குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. பணகுடி மேற்கு தொடர்ச்சி மலையில் கடந்த சில நாட்களாக சாரல் மழை பெய்து வருவதால் அங்கு உற்பத்தியாகும் குத்திரபாஞ்சான் அருவி, கன்னிமார் ஓடை, உலக்கை அருவி ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, அனுமன் நதியில் மழை வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் மியாபுதுக்குளம், நகரைகுளம், பரிவிரிசூரியன் குளம், வீரபாண்டியன் குளம் உள்ளிட்ட 56 குளங்களுக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. கன்னிமார் தோப்பு பகுதி கால்வாய் மூலம் தண்டையார் குளம் அணைக்கட்டு பகுதிகளிலும் லேசான நீர் வரத்து உள்ளது.

மேலும், பணகுடி மேற்கு தொடர்ச்சி மலையில் ஏழைகளில் குற்றாலம் என அழைக்கப்படும் குத்திரபாஞ்சான் அருவியில் வெள்ளம் கொட்டுகிறது. மழை காலங்களில் குற்றாலத்தை போன்று அருவியில் தண்ணீர் கொட்டும் இதனால் சுற்றுலா பயணிகள் தங்களது குடும்பத்துடன் குளித்து விட்டு செல்வது வழக்கம். தற்போது கோடைகாலம் என்ற போதிலும் மழை பெய்து வருவதால் குத்திரபாஞ்சான் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் குத்திரபாஞ்சான் அருவியில் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளது. மேலும், மழை காரணமாக பணகுடி அருகே தளவாய்புரம் மற்றும் அதனை சுற்றுவட்டாரப்பகுதிகளில் உள்ள விளை நிலங்களிலுள்ள பயிர்கள் நீரில் முழ்கின. இதனால் விவசாயிகள் மத்தியில் கவலை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement