தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

9 மணி நேரத்தில் 17 செ.மீ கொட்டியது வெள்ளக்காடானது மும்பை

மும்பை: மகாராஷ்டிராவில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில், நேற்று தானே, மும்பை, ராய்காட், ரத்னகிரி ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் பிறப்பிக்கப்பட்டிருந்தது. இதற்கேற்ப நேற்று மும்பையில் மழை வெளுத்து வாங்கியது. தொடர்ந்து 3வது நாளாக மழை பெய்வதாலும், நேற்று அதிகாலையில் இருந்தே கனமழை வெளுத்து வாங்கியதாலும் நகரின் பல பகுதிகளிலும் வெள்ளக்காடானது. தாழ்வான பகுதிகளில் மழை வெள்ளம் தேங்கியது. அந்தேரி சுரங்கப்பாதை, லோகண்ட்வாடா காம்ப்ளக்ஸ் உள்ளிட்ட சில இடங்கள் வாகனம் செல்ல முடியாத அளவுக்கு மழைநீர் தேங்கியது. சுரங்கப்பாதை உள்பட இந்தப் பகுதிகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. மும்பை லோகண்ட்வாலா வளாகம் போன்ற சில தாழ்வான பகுதிகளிலும் தண்ணீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலை போக்குவரத்து ஒரு புறம் இருக்க, மும்பையில் பொதுப் போக்குவரத்தின் உயிர்நாடியாகத் திகழும் மின்சார ரயில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. நேற்று சுமார் 9 மணி நேரத்தில் மும்பையின் பல பகுதிகளில் 17 செ.மீக்கும் அதிகமாக மழை பெய்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

Advertisement

Advertisement

Related News