தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டிற்கு ரூ.522 கோடி பேரிடர் நிதி ஒதுக்கீடு: ஒன்றிய அரசு அறிவிப்பு

Advertisement

புதுடெல்லி: கடந்த 2024ம் ஆண்டு வெள்ளம், நிலச்சரிவு, புயல், மேகவெடிப்பு போன்ற இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்பட்ட பீகார், இமாச்சல பிரதேசம், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கு ரூ.1,280.35 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான உயர்மட்ட குழு ஒப்புதல் அளித்துள்ளது. இதுகுறித்து ஒன்றிய அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அரசு இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு எப்போதும் ஆதரவாக நிற்கிறது.

கடந்த ஆண்டு இயற்கை பேரிடர்களை சந்தித்த பீகார், இமாச்சல பிரதேசம், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கு பேரிடர் நிவாரண நிதியின் கீழ் ரூ.1,280.35 கோடியை கூடுதல் நிதியாக வழங்க முடிவு செய்துள்ளது. இதில், பீகாருக்கு ரூ.588.73 கோடியும், இமாச்சல பிரதேசத்துக்கு ரூ.136.22 கோடியும், தமிழ்நாட்டிற்கு ரூ.522.34 கோடியும், புதுச்சேரிக்கு ரூ.33.06 கோடியும் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

2024-25ம் நிதியாண்டில், மாநில பேரிடர் நிவாரண நிதியின் கீழ் 28 மாநிலங்களுக்கு ரூ.20,264.40 கோடியும், தேசிய பேரிடர் நிவாரண நிதியின் கீழ் 19 மாநிலங்களுக்கு ரூ.5,160.76 கோடியும் வழங்கப்பட்டுள்ளது. மேலும், மாநில பேரிடர் தணிப்பு நிதியிலிருந்து 19 மாநிலங்களுக்கு ரூ.4984.25 கோடியும், தேசிய பேரிடர் தணிப்பு நிதியிலிருந்து 8 மாநிலங்களுக்கு ரூ.719.72 கோடியும் விடுவிக்கப்பட்டுள்ளது. அனைத்து பேரிடர்களுக்குப் பிறகும், மாநிலங்களில் பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய குழுக்கள் உடனடியாக அனுப்பப்பட்டு அதன் அறிக்கை அடிப்படையில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

Related News