தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

விமானத்தில் கொண்டு செல்ல பக்தர்கள் இருமுடிக்கு அனுமதி மறுப்பு: செல்வப்பெருந்தகை கண்டனம்

சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று சென்னையில் இருந்து மதுரைக்கு பயணிகள் விமானத்தில் சென்றார். முன்னதாக விமான நிலையத்தில் அவர் அளித்த பேட்டி: இந்துக்களுக்கான கட்சி என்று பாஜவினர் கூறி வருகின்றனர். நானும் இந்துதான். எனினும், இந்தாண்டு விமானங்களில் சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் இருமுடி எடுத்து செல்வதற்கு அனுமதி இல்லை என்று அறிவிப்பு வெளியிட்டதாக தகவல் வந்துள்ளது. அப்படியெனில், இந்துக்களின் மனம் புண்படும் வகையில் ஏன் இந்த நடவடிக்கையை மத்திய பாஜ அரசு எடுத்துள்ளது.

Advertisement

இதனால் வெளிநாடுகளை சேர்ந்த இந்துக்கள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் பெரிதும் வேதனை அடைந்துள்ளனர். பக்தர்களின் நோக்கம், இருமுடி சுமந்து சென்று இறைவனை வழிபட வேண்டும் என்பது. அனைத்து கடவுள்களையும் எல்லோரும் வழிபட வேண்டும் என்பது காங்கிரசின் கொள்கை. கோட்பாடு. இந்த பிரச்னையில் பிரதமர் மோடி உடனடியாக தலையிட்டு, இந்தாண்டும் சபரிமலைக்கு விமானத்தில் செல்லும் பக்தர்கள் இருமுடி எடுத்து செல்வதற்கு அனுமதி வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இல்லையெனில், இந்துக்களுக்கு விரோதமான கட்சி ஒன்றிய பாஜ அரசு என்பதை விரைவில் மக்கள் தெளிவுபடுத்துவார்கள். எஸ்.ஐ.ஆருக்கு எதிராக தமிழக வெற்றி கழகத்தின் போராட்டம் வரவேற்கத்தக்கது. ஜனநாயக சக்திகள் எல்லாம் சேர்ந்து, எஸ்.ஐ.ஆருக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும். இவ்வாறு கூறினார்.

Advertisement