தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கொசஸ்தலை ஆற்றில் திடீர் வெள்ளப் பெருக்கு: பள்ளிப்பட்டு அருகே 3 தரைப்பாலங்கள் மூழ்கின

பள்ளிப்பட்டு: பள்ளிப்பட்டு அருகே கொசஸ்தலை ஆற்றில் இன்று அதிகாலை திடீரென வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால், அங்கு கரையோரத்தில் வசிக்கும் கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. மேலும், இந்த வெள்ளப் பெருக்கினால் 3 தரைப்பாலங்கள் மூழ்கியதில் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

Advertisement

ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணாபுரம் நீர்தேக்க அணையில் கட்டாற்று வெள்ளம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் அந்த அணை முழு கொள்ளளவை எட்டியதால், நேற்று மாலை முதல் இன்று அதிகாலை வரை அதிகளவு உபரிநீர் திறந்து விடப்பட்டது. இதனால் பள்ளிப்பட்டு அருகே உள்ள கொசஸ்தலை ஆற்றில் இன்று அதிகாலை முதல் அதிகளவு வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பள்ளிப்பட்டு அருகே கீழ்கால்பட்டடை, சாமந்தவாடா, நெடியம் பகுதிகளில் உள்ள 3 தரைப்பாலங்கள் வெள்ள நீரில் மூழ்கிவிட்டன. இதனால் அப்பகுதியில் வாகன போக்குவரத்து துண்டிக்கப்பட்டு முற்றிலும் முடங்கியது.

மேலும் பள்ளிப்பட்டு, சொரக்காய்பேட்டை பகுதிகளில் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே உள்ள தடுப்பணைகளிலும் வெள்ளம் கரைபுரண்டு சீறிப் பாய்ந்து செல்கிறது. இதனால், கொசஸ்தலை ஆற்றின் கரையோரங்களில் வசிக்கும் கிராம மக்களுக்கு வருவாய்துறை சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. மேலும், கொசஸ்தலை ஆற்றின் தரைப்பால பகுதிகளில் போலீசாரும் வருவாய் துறையினரும் எச்சரிக்கை பலகை வைத்து, பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அங்கு கிராம மக்களிடையே பரபரப்பு நிலவியது.

Advertisement

Related News