தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஐந்து ரதம்-மாமல்லபுரம்

பல்லவர்களின் கட்டடக்கலையை என்றும் அழியாமல் பறைசாற்றும் குடைவரைக் கோயில்களும், கற்சிற்பங்களும் நிறைந்த மாமல்லபுரம் பல்லவர் காலத்தில் துறைமுக நகரமாக இருந்துள்ளது. பல்லவர் கட்டடக் கலைக்கும், ஆரம்ப காலத் திராவிடக் கட்டடக் கலைக்கும் எடுத்துக்காட்டுகளாக இங்கே ரதக் கோயில்கள் எனப்படும் ஒற்றைக் கற்றளிகளும் இடம் பெற்றுள்ளன. இவை நிலத்தில் ஆங்காங்கே இருந்த பெரிய பாறைகளைச் செதுக்கி அமைக்கப்பட்ட ஒரே வரிசையில் அமைந்துள்ள கோயில்களாகும்.

Advertisement

இவற்றைப் பஞ்ச பாண்டவர் ரதங்கள் எனவும் அழைப்பதுண்டு. இவை ஒவ்வொன்றும் மகாபாரதத்தின் முதன்மைப் பாத்திரங்களான தருமர், வீமன், அர்ச்சுனன், நகுலன், சகாதேவன், திரவுபதி ஆகியோரின் பெயராலேயே குறிப்பிடப்படுகின்றன. பஞ்சபாண்டவர்களின் பெயர்களிட்டு அழைக்கப்பட்டாலும், இவை அவர்களுக்குரிய கோயில்களோ அல்லது ரதங்களோ அல்ல. ரதக்கோயில்கள் ஒவ்வொன்றும் வெவ்வேறு கடவுள்களுக்காக அமைக்கப்பட்டவை.

தர்மரதம் என்பது இவற்றுள் பெரியது சிவனுக்கு உரிய கோயிலாகும். வீமரதம் எனப்படுவது, திருமாலுக்காக அமைக்கப்பட்ட கோயிலாகும். அர்ச்சுன ரதம் என்பது எந்தக் கடவுளுக்காக அமைக்கப்பட்டது என்பதில் பல்வேறு கருத்துகள் நிலவினாலும் பொதுவாக இது முருகக் கடவுளுக்காக அமைக்கப்பட்டது என கூறப்படுகிறது. இதை இன்னொரு சிவன் கோயிலாக அடையாளம் காண்போரும் உண்டு.

நகுல சகாதேவ ரதம் என்பது இந்திரனுக்காக அமைக்கப்பட்ட கோயிலாகக் கருதப்படுகிறது. இது யானையின் பின்பகுதி அமைப்பிலான விமானத்தைக் கொண்டுள்ளது. இவ்வகை விமானத்தைத் தமிழில் தூங்கானை விமானம் என்பர். இக்கோயிலிலும் சிற்பங்கள் இல்லை என்பதுடன் கட்டடம் முற்றுப்பெறாத நிலையிலேயே காணப்படுகின்றது. திரவுபதி ரதம் என்பது சிறு குடில் ஒன்றின் அமைப்பை ஒத்துக் காணப்படும் இக்கோயில் கொற்றவைக்கு உரியதாகும்.

கட்டடக்கலை அடிப்படையில் இக்கோயில்கள் ஒவ்வொன்றும் அக்காலத்தில் வழக்கிலிருந்த வெவ்வேறு கட்டட வகைகளைப் பின்பற்றி அமைந்திருப்பது இவற்றின் தனிச் சிறப்பாகும்.

Advertisement