தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மீன்பிடி திருவிழாவில் கிராமமக்கள் ஆர்வமுடன் பங்கேற்பு

Advertisement

திருப்புத்தூர் : திருப்புத்தூர் அருகே குண்டேந்தல்பட்டியில் மீன்பிடித் திருவிழா நடைபெற்றது. இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு ஆர்வத்துடன் மீன்களை பிடித்தனர்.

திருப்புத்தூர் வட்டார பகுதி கிராமங்களில் உள்ள கண்மாய்களில் நீர் இருப்பு குறைந்து வருவதால், மீன்பிடித் திருவிழாக்கள் நடைபெற்று வருகிறது. பல இடங்களில் அழிகண்மாய் என்ற பெயரில் இலவசமாகவும், சில இடங்களில் ஊத்தா குத்துதல் என்ற பெயரில் கட்டணம் வசூலித்தும் மீன் பிடிக்க அனுமதிப்பார்கள்.

இந்நிலையில், நேற்று முன்தினம் திருப்புத்தூர் அருகே குண்டேந்தல்பட்டியில் உள்ள பிராமணக் கண்மாயில் அழிகண்மாய் என்ற பெயரில் இலவசமாக பாரம்பரிய மீன்பிடி திருவிழா நடைபெற்றது. இதில் திருக்கோஷ்டியூர், எஸ்.எஸ்.கோட்டை, சுண்ணாம்பிருப்பு, திருக்களாம்பூர், மதகுபட்டி, ஏரியூர் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வருகை தந்த 800க்கும் மேற்பட்டோர் இந்த மீன்பிடி திருவிழாவில் கலந்து கொண்டு ஆர்வத்துடன் மீன்களை பிடித்தனர்.

இதில் தாங்கள் கொண்டு வந்திருந்த ஊத்தா, கொசுவலை, மீன்பிடி வலை, அரி கூடை, கச்சா உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்கள் மூலம் சிறுவர்கள், பெண்கள் என பலரும் ஆர்வத்துடன் மீன்களைப் பிடிக்க ஆரம்பித்தனர். இதில் ஜிலேபி, குரவை, விரா உள்ளிட்ட நாட்டு வகை மீன்கள் கிடைத்தன.

Advertisement