தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தமிழ்நாட்டில் நள்ளிரவு முதல் மீன்பிடி தடைக்காலம் அமல்: 15,000 விசைப்படகுகள் கரை நிறுத்தம்

நாகை: தமிழ்நாட்டில் 61 நாள் மீன்பிடி தடை காலம் இன்று நள்ளிரவு முதல் துவங்குகிறது. 15,000 விசைப்படகுகள் 2 மாதங்களுக்கு கடலுக்கு செல்லாது. தமிழக கடலில் மீன்களின் இனப்பெருக்கத்திற்காக ஆண்டுதோறும் ஏப்.15ம் தேதி முதல் ஜூன் 14 வரை 61 நாட்கள் மீன்பிடி தடை காலம் அமலில் இருக்கும். இந்த காலகட்டத்தில் விசைப்படகுகள் மற்றும் இழுவைப் படகுகள் மூலம் மீன்பிடிக்கத் தடை விதிக்கப்படுகிறது. அதன்படி, தமிழகத்தின் இந்த ஆண்டுக்கான 61 நாள் மீன்பிடித் தடைக்காலம் இன்று நள்ளிரவு (ஏப்ரல் 14ம் தேதி) முதல் அமலுக்கு வருகிறது.
Advertisement

அதன்படி கன்னியாகுமரி முதல் திருவள்ளூர் மாவட்டம் வரையிலான தமிழகத்தின் கிழக்கு கடற்கரை பகுதியில் வரும் ஜூன் 14ம் தேதி வரை 61 நாட்கள் விசைப்படகுகள் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த காலகட்டத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர் ஆகிய 14 கடற்கரை மாவட்டங்களைச் சேர்ந்த 15 ஆயிரம் விசைப்படகுகள் மற்றும் இழுவைப் படகுகள் கடலுக்குச் செல்லாமல், மீன்பிடித் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும். தற்ேபாது மீனவர்கள் படகுகளை கரை நிறுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் சுமார் 8 லட்சம் மீனவர்கள், மீன்பிடி சார்ந்த தொழிலாளர்கள் முடங்குவர்.

ஒட்டுமொத்தமாக டெல்டாவில் மட்டும் 3,080 விசைப்படகுகள் இன்று முதல் 61 நாட்களுக்கு கடலுக்கு மீன் பிடிக்க செல்லாது. இதனால் 1.45 லட்சம் மீனவர், மீன்பிடி சார்ந்த தொழிலாளர்கள் வீடுகளில் முடங்குவர்.

இதுகுறித்து மீன்வளத்துறை அதிகாரிகள் கூறும்போது,

மீன்பிடி தடைக்காலம் இன்று நள்ளிரவு அதாவது 15ம் தேதி முதல் வரும் ஜூன் 14ம் தேதி வரை 61 நாட்கள் அமலில் இருக்கும். இந்த தடைக்காலத்தில் மீன்பிடி விசைப்படகுகள் கடலில் சென்று மீன் பிடிக்க முழுமையாக தடை விதிக்கப்படுகிறது. ஆனால் நாட்டு படகுகள் வைத்திருக்கும் மீனவர்கள் 5 கடல் மைல் தூரத்திற்குள் சென்று மீன் பிடிக்கலாம். மீன்பிடி தடைக்காலத்தில் சென்னை முதல் கன்னியாகுமரி வரை 15ஆயிரம் விசை படகுகளுக்கு மேல் உள்ளன. இதனை சேர்ந்த சுமார் 1.90 லட்சம் குடும்பங்கள் உள்ளன. இவர்களுக்கு 61 நாட்களுக்கு நிவாரணமாக ரூ.8 ஆயிரம் அரசு சார்பில் வழங்கப்படும் என்றனர்.

Advertisement