தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கடலில் பலத்த சூறைக்காற்று; 2வது நாளாக கடலுக்கு செல்லாத மீனவர்கள்: வாழ்வாதாரம் பாதிப்பு

மண்டபம்:ஆழ்கடலில் பலத்த சூறைக்காற்று வீசி வருவதால் மண்டபம், ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று 2வது நாளாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. பாக்ஜலசந்தி மற்றும் மன்னார் வளைகுடா ஆழ்கடல் பகுதியில் மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த சூறைக்காற்று வீசி வருகிறது. கடல் சீற்றத்துடன் காணப்படுக்கிறது. இதனால் ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேஸ்வரம், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு செல்ல நேற்று தடை விதிக்கப்பட்டது. ராமேஸ்வரம், மண்டபம், பாம்பன் பகுதியில் 1,200க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளன. மண்டபம் பகுதியில் 600-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளை மீனவர்கள் கடலில் நங்கூரமிட்டு பாதுகாப்பாக நிறுத்தியுள்ளனர். தடை உத்தரவு இன்று 2வது நாளாக தொடர்வதால் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. இதனால் அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மண்டபம் பகுதியில் நேற்று அதிகாலை முதல் சாரல் மழை இடைவிடாமல் பெய்தது. இதனால், மீன்களை உலர்த்தும் பணி பாதிக்கப்பட்டது. தொழிலாளிகள், பொதுமக்கள் சிரமப்பட்டனர். இன்றும் வானம் மேக மூட்டத்துடன் காணப்படுகிறது. இதுகுறித்து மீனவர்கள் கூறியதாவது : அண்மையில் டிட்வா புயலால் கடலுக்கு செல்ல ஒரு வாரத்திற்கு மேல் தடை விதிக்கப்பட்டது. இதனால் மீன்பிடி பணி பெரிதும் பாதிக்கப்பட்டது. எங்களது வாழ்வாதாரம் கேள்விக்குறியானது. இந்நிலையில், தற்போது ஆழ்கடலில் பலத்த சூறைக்காற்று வீசி வருவதால் மீன்பிடி பணிக்கு மீண்டும் தடை விதிக்கப்பட்டு அனுமதி டோக்கன் வழங்கப்படவில்லை. இயற்கை இடற்களால் கடலுக்கு செல்ல முடியாமல் மீனவர்கள் வாழ்வாதாரம் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறது. விரைவில் நிலைமை சீராகி கடலுக்கு செல்லும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறோம். இவ்வாறு மீனவர்கள் தெரிவித்தனர்.

Advertisement

Related News