கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூரத் தாக்குதல்
நாகை: கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூரத் தாக்குதல் நடத்தினர். கடற்கொள்ளையர்கள் தாக்குதலில் பலத்த காயமடைந்த 11 மீனவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நாகை மாவட்டம் நம்பியார்நகர் மீனவ கிராமத்தை சேர்ந்த சசிகுமார், உதயசங்கர் உள்பட 11 பேர் அரிவாளால் வெட்டப்பட்டுள்ளனர். படகு என்ஜின், ஜிபிஎஸ் கருவி, வாக்கி டாக்கி, வலைகள், மீன்கள், தங்கம் செயினை பறித்துச் சென்றதாக வேதனை தெரிவித்துள்ளனர்.
Advertisement
Advertisement