தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தங்கச்சிமடத்தில் மீனவர்கள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு: நடுவழியில் ரயில் நிறுத்தம்

ராமேஸ்வரம்: தங்கச்சிமடத்தில் மீனவர்கள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இலங்கை சிறையில் உள்ள மீனவர்களையும், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளையும் உடனே விடுவிக்க கோரி, காலவரையற்ற வேலைநிறுத்தம் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபடுவது என ராமேஸ்வரத்தில் மீனவ சங்கங்கள் முடிவு செய்தன. அதன்படி கடந்த ஆக. 11ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தங்கச்சிமடத்தில் கடந்த 13ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம், 15ம் தேதி உண்ணாவிரதப் போராட்டமும் நடத்தினர்.

Advertisement

ஆனாலும், ஒன்றிய அரசு மீனவர்களை மீட்க எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால், ஏற்கனவே அறிவித்தபடி இன்று தங்கச்சிமடத்தில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட மீனவர்கள் திட்டமிட்டனர். இதையடுத்து ராமநாதபுரத்தில் கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமையில் முதல் கட்ட அமைதி பேச்சுவார்த்தை நடந்தது. இதில் சுமூக உடன்பாடு ஏற்படாததால், இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நேற்று, ராமேஸ்வரம் தாலுகா அலுவலகத்தில் கோட்டாட்சியர் ராஜமனோகரன் தலைமையில் நடந்தது. அதிலும் உடன்பாடு ஏற்படாததால் திட்டமிட்டப்படி இன்று பிற்பகல் 3 மணியளவில் தங்கச்சிமடத்தில் மீனவர்கள் மாபெரும் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

அதன்படி தங்கச்சிமடத்தில் மீனவர்கள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தங்கச்சிமடத்தில் தண்டவாளத்தில் அமர்ந்து மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இலங்கை கடற்படை சிறைபிடித்த மீனவர்கள், படகுகளை விடுவிக்க வலியுறுத்தி வருகின்றனர். ராமேஸ்வரம் மீனவர்கள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மீனவர்கள் ரயிலை மறித்ததால் ராமேஸ்வரம் - தாம்பரம் எக்ஸ்பிரஸ் ரயில் தங்கச்சிமடத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.

Advertisement

Related News