தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மீனவர்களை தாக்கி கொள்ளை கடற்கொள்ளையர் அட்டூழியம்

நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் மாவட்டம் செருதூர் சுனாமி குடியிருப்பில் இருந்து பைபர் படகில் கடந்த 1ம் தேதி உத்திராபதி (65), சூரியமூர்த்தி (55), வீரப்பன் (40), சுகேந்திரன் (20) ஆகிய 4 பேர் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். நேற்று (3ம்தேதி) அதிகாலை 3 மணி அளவில் வேதாரண்யத்திற்கு தென்கிழக்கே 5 நாட்டிகல் கடல் மைல் தூரத்தில் மீன்பிடித்தபோது 2 ஸ்பீடு பைபர் படகுகளில் வந்த 7 கடற்கொள்ளையர், நாகப்பட்டினம் மீனவர்கள் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி 300 கிலோ எடையுள்ள மீன்பிடி வலையை அறுத்து எடுத்துச் சென்றனர்.

Advertisement

இவற்றின் மதிப்பு ரூ.3 லட்சம். இதேபோல், அதிராம்பட்டினம் மதன் குமார் (27), மல்லிபட்டிணம் செல்லபாண்டி (42), ராமநாதபுரம் மாவட்டம் காவிரிபட்டினம் ஆல்பார்ட் (38) ஆகியோர் கடந்த 30ம் தேதி பதிவெண் இல்லாத பைபர் படகில் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர், கடந்த 1ம் தேதி கோடியக்கரைக்கு தெற்கே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது,

பைபர் படகில் வந்த இலங்கை தமிழ் பேசும் கொள்ளையர் கத்தி‌ மற்றும் இரும்பு கம்பியால் இவர்களை தாக்கி, செல்போன் -4, டார்ச் லைட்-4, 150 கிலோ மீன் ஆகியவற்றை பறித்ததோடு ரூ.1.50 லட்சம் மதிப்புள்ள 300 கிலோ மீன்பிடி வலையை வெட்டிவிட்டு, 40 லிட்டர் டீசலை கடலில் ஊற்றி சென்று விட்டனர். கடற்கொள்ளையர்கள் அட்டூழியத்தால் மீனவ கிராமங்கள் சோகத்தில் மூழ்கி உள்ளது.

Advertisement

Related News