தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்த மீனவரின் உடல் உறுப்புகள் தானம்

தண்டையார்பேட்டை: திருவள்ளூர் அருகே புலிகேட்டு, சின்னம்மன் கோயில் தெரு, அரங்கன்குப்பத்தை சேர்ந்தவர் மீனவர் சந்தோஷ் (40). இவர், தனது மனைவி சாமந்தி, 2 மகள், ஒரு மகன் மற்றும் தாயுடன் வசித்து வந்தார். கடந்த 11ம் தேதி எண்ணூரில் வேலை முடிந்து வீட்டுக்கு பைக்கில் திரும்பி கொண்டிருந்தார் சந்தோஷ். அனல் மின்நிலையம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சந்தோஷ் படுகாயமடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். கடந்த 18ம் தேதி சந்தோஷுக்கு மூளைச்சாவு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, மருத்துவமனை நிர்வாகம், அவரது குடும்பத்தினரிடம் பேசி, சந்தோஷின் உடல் உறுப்புகளை தானம் செய்யம்படி தெரிவித்தனர்.

Advertisement

அதற்கு அவரது குடும்பத்தினர் சம்மதம் அளித்தனர். இதையடுத்து, டாக்டர் அரவிந்த் தலைமையில் சந்தோஷிடம் இருந்து 2 சிறுநீரகங்கள், கல்லீரல், இதய வால்வு, தோல் ஆகிய 5 உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டன. இவை, அரசு விதிமுறைப்படி பதிவு செய்து காத்திருக்கும் அரசு மருத்துவமனையை சேர்ந்த நபர்களுக்கு வழங்கப்படும் என்று மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்தனர். பின்னர் சந்தோஷின் உடலுக்கு அரசு மரியாதை செய்யப்பட்டு, அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

Advertisement

Related News