ரூ.177.16 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புதிய மீன் இறங்குதளங்களை திறந்து வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னை: மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் ரூ.177.16 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புதிய மீன் இறங்குதளங்கள், மீன் விதை பண்ணை மற்றும் பயிற்சி மையத்துடன் கூடிய அலுவலகக் கட்டடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். தொடர்ந்து கால்நடை பராமரிப்புத் துறைக்காக தெரிவு செய்யப்பட்ட 22 நபர்களுக்கு பணி முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.