தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

முதல் கணவன் இருக்கும் நிலையில் காதலனை 2ம் திருமணம் செய்து போலீசில் இளம்பெண் தஞ்சம்: உறவினர்கள் அடிதடி

ஓமலூர்: சேலம் மாவட்டம் காடையாம்பட்டி தாலுகா, கொங்குப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ராமு(30). இவரது மனைவி பிரியா (24). துணி கடை நடத்தி வருகிறார். ஆனால், வேறு ஒரு துணி கடையில் பிரியா வேலை செய்துள்ளார். அப்போது, சிமெள்ட் கடையில் வேலை செய்யும் சின்னதிருப்பதியை சேர்ந்த ஹரிஷ்குமாருடன்(25) பிரியாவுக்கு, பழக்கம் ஏற்பட்டு தகாத உறவாக மாறியது. இருவரும் சிவ நாட்களுக்கு முன்பு, ஊட்டிக்கு சென்று, அங்குள்ள முருகன் கோயிலில் திருமணம் செய்து கொண்டனர். பின்னர், கணவர் வீட்டாரால் தங்கள் உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறி, நேற்று முன்தினம் இரவு ஓமலூர் அனைத்து மகளிர் போலீசில் தஞ்சமடைந்தனர்.

Advertisement

அங்கு வந்த ராமு மற்றும் உறவினர்கள், காவல் நிலையத்திற்குள் புகுந்து, பிரியாவை தாக்க முயன்றனர். அவர்களை மகளிர் போலீசார் தடுத்து வெளியேற்றினர். ஆனால், வெளியில் நின்ற காதலன் ஹரிஷ்குமார் வீட்டாரை சரமாரியாக தாக்கினர். பின்னர், போலீசார் பிரியாவிடம் நடத்திய விசாரணையில், திருமணமாகி 3 ஆண்டுகளாக கணவர் ராமு, என்னுடன் குடும்பம் நடத்தவில்லை. அதனால், எனது வாழ்க்கையை நானே தேர்வு செய்து கொண்டேன். என்னை காதல் கணவர் ஹரிஷ்குமாருடன் அனுப்பி வைக்க வேண்டும் என்று தெரிவித்தார். ராமு தன்னுடன் அனுப்புமாறு கூறினார். போலீசார் நடத்திய நீண்ட நேர பேச்சுவார்த்தைக்கு பிறகு இருவரையும் உதறிவிட்டு பெற்றோருடன் செல்கிறேன் என பிரியா தெரிவித்தார். இதையடுத்து, பிரியாவை பெற்றோருடன் போலீசார் அனுப்பி வைத்தனர்.

Advertisement